Ad

திங்கள், 30 நவம்பர், 2020

`சந்தேக நபரை புகைப்படம் எடுத்தாலே போதும்!' - திண்டுக்கல் காவல்துறையில் FACETAGR செயலி

திண்டுக்கல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 60 நபர்களுக்கு, FACETAGR செயலி பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர் என உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

FACETAGR செயலி பயிற்சி வகுப்பு

Also Read: டிரைவிங் லைசன்ஸ் மறந்துட்டோமேன்னு இனி கவலை வேண்டாம்..! - ஒரு அசத்தல் செயலி #MyVikatan

பயிற்சி வகுப்பு பற்றி, மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”இரவு நேரங்களில் ரோந்துப்பணியில் ஈடுபடும் போது, சந்தேகத்திற்கு இடமான நபர் என நினைத்தால், உடனே, தனது மொபைலில் உள்ள FACETAGR செயலியின் மூலம் அந்த நபரை புகைப்படம் எடுத்தால், அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் ஏதும் உள்ளதா என அச்செயலி ஒப்பிட்டுக்காட்டும். பழைய குற்றவாளிகளாக இருந்தாலும் இதன் மூலம் கண்டுபிடிக்க முடியும். அதே நேரத்தில், சந்தேகத்திற்கு ஆளான நபர், குற்றவாளி இல்லையென்றால், அவரை உடனே விடுவிக்க முடியும். இந்த செயலி மூலம், இரவு நேரம் மட்டுமல்லாமல், 24 மணி நேரமும் ரோந்துப்பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு பெரிதும் உதவியாக இருக்கும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FACETAGR செயலி பயிற்சி வகுப்பு

Also Read: வாழை நோய்களைக் கண்டறியும் ‘டுமாய்னி’ செயலி!

சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் இடங்களுக்கு செல்லும் காவல்துறையினர், அங்கு பிரச்னையில் ஈடுபடும் நபர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளனவா என உடனடியாக அறிந்துகொள்ள FACETAGR செயலி பயன்படும் எனவும், சென்னை மாநகர காவல்துறையினரால் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படும் இந்த செயலி, தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அருகே உள்ள மாவட்டங்களின் குற்றவாளிகளின் விவரங்களும், இந்த செயலியில் அப்டேட் செய்யப்பட்டிருப்பதால், குற்றவாளிகளை விரைவாக அடையாளம் காண உதவும் எனவும் கூறப்படுகிறது. FACETAGR செயலியானது முழுக்க முழுக்க காவல்துறையினருக்கானது. அதனால், மக்கள் யாரும் இச்செயலியை பயன்படுத்த இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/general-news/facetagr-processor-introduced-in-the-police-department-in-dindigul

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக