Ad

வெள்ளி, 27 நவம்பர், 2020

கமுதி: 4 மாதக் குழந்தையுடன் விபரீத முடிவெடுத்த தாய்! - கொலையா என போலீஸ் விசாரணை

கமுதி அருகே குடும்ப பிரச்சனையினால் மனம் வெறுத்த இளம்பெண் தனது 4 மாத கைக் குழந்தையுடன் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் குருதேவி.

கமுதியை அருகே உள்ளது மேலமுடிமன்னார் கோட்டை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொன்முருகன் (27). தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவருக்கும் விருதுநகர் மாவட்டம் தொப்பலாக்கரையை சேர்ந்த குருதேவி (24) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருணம் நடைபெற்றது. இவர்களுக்கு மலைகீர்த்தணன் என்ற 4 மாதமே ஆன ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையைத் தன்மீதும், தனது 4 மாத கைக் குழந்தையின் மீதும் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பொன்முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்காமலே குருதேவி மற்றும் குழந்தையின் உடல்களை எரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கமுதி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

4 மாத குழந்தை

இதனைத் தொடர்ந்து கீழமுடிமன்னார்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் செந்தூர்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் கமுதி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், குருதேவி தானாகவே தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்ட நிலையில் எரிக்கப்பட்டாரா என்பது குறித்து குருதேவியின் கணவர் பொன்முருகன், அவரது தந்தை முத்துசாமி, குருதேவியின் தாயார் ஜெயலட்சுமி ஆகியோரிடம் கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரசன்னா தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/death/kamuthi-police-investigates-double-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக