Ad

திங்கள், 30 நவம்பர், 2020

குமரிக்கு புயல் எச்சரிக்கை: 161 படகுகளில் சென்ற மீனவர்கள் நிலை என்ன?

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறி, வரும் 3-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புயலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் கூறுகையில்,``வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாற வாய்ப்பு இருக்கிறது. நாளை மறுநாள் (3.12.2020) அது குமரி மாவட்டத்தை அடையும் என ஐ.எம்.டி.ஏ கூறிவருகிறது. கடைசி நான்கைந்து நாள்களாக இதுபற்றி எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். மீனவர்களுக்குக் கடந்த வெள்ளிக்கிழமையே எச்சரிக்கை கொடுத்து விட்டோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கரைக்கு வந்துவிட்டன. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் 161 படகுகள் கரை திரும்ப வேண்டியுள்ளது. கடலோரக் காவல்படை, மீன்வளத் துறை மூலமாக அவர்களைத் தொடர்புகொண்டு வருகிறோம்.

கலெக்டர் அரவிந்த்

கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா என எந்தப் பகுதி அருகில் இருக்கிறதோ, அந்தப் பகுதியில் கரை ஒதுங்க அறிவுறுத்தி வருகிறோம். அதுசமந்தமாக தொடர்ந்து ஃபாலோ பண்ணிக் கொண்டிருக்கிறோம். நேற்று அவசரக் கடுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஒன்றிய அளவில் ஒன்பது டீம்கள் தயாராக அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

Also Read: நிவர் புயல்: செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு! - பொதுப்பணித்துறை எப்படித் திட்டமிட்டது?

மாவட்டம் முழுவதும் 75 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகளும் புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம். தேசிய பேரிடர் மீட்புக்குழுவின் மூன்று குழுக்கள் வந்துள்ளன. எங்கு தண்ணீர் தேங்கி மீட்புப் பணி தேவைப்படுகிறதோ, அங்கு அந்த டீமை அனுப்பி வைப்போம். மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் -1, சிற்றார் -2 ஆகிய அணைகள் பாதுகாப்பு நிலையில் இருக்கின்றன. பெரிய மழை வந்தாலும் சமாளிக்கும் நிலையில் உள்ளோம்.

பேரிடர் மீட்புக்குழுவினர்

மழை கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். அதனால் மக்கள் அரிசி, பருப்பு போன்றவைகளை ஒரு வாரத்துக்கான தேவைக்கு வாங்கி வைத்துக் கொள்ளவும். மின் இணைப்புத் துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. டார்ச், பேட்டரி போன்றவைகளைத் தயாராக வைத்திருப்பது நல்லது. ஒக்கி புயல் திடீரென அடித்தது. ஆனால், இந்த புயல் குறித்து நான்கைந்து நாள்களாகத் தகவல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். 3-ம் தேதி மாலை கனமழை இருக்கும் என்கிறார்கள். இன்று மாலை முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் கூறியுள்ளனர்" என்றார்.



source https://www.vikatan.com/news/disaster/kanyakumari-collector-speaks-about-cyclone-pre-cautionary-measures

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக