Ad

திங்கள், 29 ஜூன், 2020

`நட்பில் இருந்த பெண் இறந்ததால் விரக்தி' -சோகத்தில் முடிந்த சென்னை இளைஞரின் வாழ்க்கை

சென்னை ஆவடி காமராஜ நகரில் குடியிருந்தவர் சந்துரு (29). இவருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் நீண்டகாலமாக பழக்கம் இருந்தது. அதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சந்துரு, குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றார். சந்துருவுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இந்த நிலையில் சந்துரு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் ஆவடி போலீஸார் சந்துருவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்துரு மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை

இதற்கிடையில், சந்துருவின் அம்மா கலைவாணி, ஆவடி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது,

`நான் சென்னை, தலைமைச் செயலக காலனி, 4-வது தெருவில் கடந்த எட்டு மாதங்களாக வாடகைக்கு வசித்து வருகிறேன். என் கணவர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். எனக்கு சந்துரு (29) என்ற மகனும் 25 வயதில் ஒரு மகளும் உள்ளனர். என் மகன் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளான். சந்துரு, என்னை விட்டு பிரிந்து ஏழு வருடங்களாக தனியாக வசித்துவருகிறார். அதனால் நானும் என் மகளும் மட்டும் தலைமைச் செயலக காலனியில் வசித்துவருகிறோம். என் மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகவில்லை.

தற்கொலை

என் மகன் சந்துருக்கும் அயனாவரத்தைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. அந்தத் தகவல் எனக்குத் தெரியும். என் தங்கையிடம் மட்டும் சந்துரு பேசிவந்தான். என்னிடம் போனிலும் நேரிலும் பேசியது இல்லை. கடந்த 19-ம் தேதி அயனாவரம் பெண் இறந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர். இந்தச் சூழலில் ஆவடி காமராஜர்நகர் பட்டேல் தெருவில் குடியிருக்கும் ஞானசேகர் என்பவர் எனக்கு போன் செய்து, சந்துரு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார்.

ஆவடி

Also Read: `ஆஃபர் பிரியாணியில் கிடைத்த குஸ்கா!' - கணவரை மிரட்ட தீக்குளித்த மனைவி

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது கைலியால் சந்துரு தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அயனாவரம் பெண் இறந்த மனவிரக்தியால் சந்துரு இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. எனவே, முறைப்படி என் மகன் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து எங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்பேரில் எஸ்.ஐ சோனைராஜன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார். பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு சந்துருவின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட தவறான நட்பால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-youth-commits-suicide-in-avadi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக