Ad

திங்கள், 29 ஜூன், 2020

சென்னை: மனைவி மீது 73 வயது கணவருக்கு சந்தேகம்! -அதிர்ச்சி கொடுத்த கொலை, தற்கொலை

சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் விவேக் நகர் 5-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெகநாதன்(73). ஜெனரேட்டர் பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி சுலோச்சனா(62). இந்தத் தம்பதிக்கு 3 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மகன் மோகன்பாபு அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

சுலோச்சனா

இந்த நிலையில், பெருங்களத்தூா் பகுதியில் நேற்று திடீரென மழை பெய்தது. அதனால் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருக்கும் ஒருவர், மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுக்கச் சென்றார். அப்போது தண்ணீர் தொட்டிக்கு வரும் குழாயின் கேபிள் வயரைப் பயன்படுத்தி ஜெகநாதன், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், ஜெகநாதனின் மனைவி சுலோச்சனாவிடம் தகவலைத் தெரிவிக்க வீட்டுக்குச் சென்றார். கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்தார். அப்போது ரத்த வெள்ளத்தில் சுலோச்சனா இறந்துகிடந்தார்.

அடுத்தடுத்த அதிர்ச்சியால் திடுக்கிட்ட அந்த நபர், அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்களுக்குத் தகவல் தெரிவித்தார். அதோடு ஜெகநாதனின் 2-வது மகள் உஷாவுக்கும் அவரின் கணவர் சற்குணத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அனைவரும் சுலோச்சனா வீட்டுக்கு வந்தனர். பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பீர்க்கன்கரணை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜெகநாதன்

உடனே சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து சுலோச்சனா, ஜெகநாதன் ஆகியோரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டுக்குள் போலீஸார் ஆய்வு செய்தபோது ரத்தக்கறை படிந்த கத்தி இருந்தது. அதையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கொலை, தற்கொலை

இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீஸார் கூறுகையில், ``ஜெகநாதன், சில நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டுள்ளார். அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மனைவி சுலோச்சனா மீது அதிகம் பாசம் வைத்திருந்துள்ளார். அதனால் மனைவியின் சமீபகால செயல்களால் அவர் அதிருப்தியடைந்துள்ளார். ஊரடங்கு நேரத்தில் சுலோச்சனா, போனில் பேசிக்கொண்டே இருந்துள்ளார். அதுவும் ஜெகநாதனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை

Also Read: `2 வயதில் அம்மா; 18 வயதில் அக்கா!' - இன்ஜினீயர் வாழ்க்கையில் தொடரும் சோகம்

சம்பவத்தன்று இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஜெகநாதன், கத்தியை எடுத்து மனைவியை வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுலோச்சனா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தன்னுடைய கண் முன்னாலேயே மனைவி இறந்த சம்பவத்தை பார்த்த ஜெகநாதன், மொட்டை மாடிக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்" என்றனர்.



source https://www.vikatan.com/social-affairs/crime/older-man-murdered-his-wife-and-commits-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக