Ad

ஞாயிறு, 28 ஜூன், 2020

வரும் ஜூலை மாதம் முதல் ஊரடங்கு எப்படி இருக்கலாம்? #VikatanPoll

தமிழகத்தில் 5-ம் கட்ட 'தளர்த்தப்பட்ட ஊரடங்கு' நாளையோடு முடிகிறது. ஜூலை 1 முதல் இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவோடு கலந்தாலோசித்து வருகிறார். தமிழகம் முழுவதும் 'தளர்த்தப்பட்ட ஊரடங்கு' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றாலும் சென்னை, மதுரை போன்ற பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கடுமையான முழு ஊரடங்கே நிலவி வருகிறது. இதேபோல், அந்தந்த பகுதிகளின் பாதிப்புக்கு ஏற்றவாறு புதிய ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஊரடங்கு குறித்து அந்தந்த மாநில அரசுகளே தீர்மானிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.


source https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-the-new-phase-of-lockdown

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக