Ad

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

ஆபாச படம் விவகாரத்தில் 4 பேர் கைது! - ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா புதிய சிக்கல்?

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த ஆண்டு ஜூலை மாதம் திரைப்படங்களுக்கு வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கு பணத்தாசை காட்டி ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அதன் வீடியோவை மொபைல் ஆப்களில் வெளியிட்டதாக கூறி கைது செய்யப்பட்டார். மூன்று மாதங்கள் வரை சிறையில் இருந்த ராஜ் குந்த்ரா செப்டம்பர் மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கில் மேலும் சிலரை போலீஸார் தேடிக்கொண்டிருந்தனர். குறிப்பாக ஆபாச படத்தை இயக்கிய நரேஷ் என்பவரையும் அவருடன் ஆபாச வீடியோ எடுக்க உதவிய சலீம் செய்யத், அப்துல் செய்யத், அமன் ஆகியோரை தேடி வந்தனர். இதில் நரேஷ் கோவா மற்றும் சிம்லாவில் பதுங்கி இருந்தார்.

ராஜ் குந்த்ரா

இந்த நிலையில் பிரச்னை ஓரளவுக்கு சரியாகிவிட்டதாக கருதி நான்கு பேரும் மும்பைக்கு வந்தனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அந்தேரியில் உள்ள வர்சோவா மற்றும் போரிவலியில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இதில் நரேஷ் ஆபாச படத்தில் நடிப்பதற்காக நடிகைகளை கட்டாயப்படுத்தி அழைத்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எஞ்சிய 3 பேரும் வெப் சீரியலில் நடிக்க வந்த நடிகையை வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆபாச வீடியோ படப்பிடிப்புக்காக 3 பேருக்கும் சம்பளமாக தலா 2 ஆயிரம் வழங்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நான்கு பேர் புதிதாக கைது செய்யப்பட்டு இருப்பது ராஜ் குந்த்ராவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக் சொல்கிறார்கள். இது குறித்து ஷில்பா ஷெட்டி கருத்து தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும் விசாரணை செய்த பிறகே இவ்விவகாரத்தில் ராஜ் குந்த்ரா மீண்டும் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து தெரிய வரும்.



source https://www.vikatan.com/news/crime/actress-shilpa-shettys-husband-gets-into-trouble-4-arrested-for-making-pornography-for-raj-kundra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக