Ad

வியாழன், 30 ஜூன், 2022

உ.பி: அடிக்கடி சண்டை; ஆண் நண்பர்கள் மூலம் சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சகோதரி

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கரும்புத்தோட்டத்தில் 13 வயது மைனர் பெண் ஒருவர் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரியின் நடவடிக்கையில் போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீஸார் அவரைத் தனியாக அழைத்து தீவிர விசாரணை நடத்தியதில் அவர்தான் இந்தக் கொலையின் முக்கியக் குற்றவாளி என்று தெரியவந்தது. இது குறித்து மாவட்ட எஸ்.பி சஞ்சீவ் கூறுகையில், ``இரண்டு சகோதரிகளும் வீட்டில் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர்.

கைதானவர்கள்

சமீபத்தில் 19 வயது மூத்த சகோதரி நான்கு பேருடன் ஒரே நேரத்தில் பழகிவந்திருக்கிறார். இதை இளைய சகோதரி கண்டுபிடித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இது குறித்து ஆண் நண்பர்களிடம் பேசி தனது சகோதரிக்கு தக்க பாடம் புகட்ட நினைத்தார். எனவே, தனது இளைய சகோதரியை ஊருக்கு வெளியில் இருக்கும் கரும்புத் தோட்டத்துக்கு இயற்கை உபாதையைக் கழித்து வரலாம் என்று கூறி அழைத்துச் சென்றார்.

அங்கு ஏற்கெனவே இருந்த அவரின் ஆண் நண்பர்கள் ரஞ்சித் சௌகான், அமர்சிங், அங்கித், சந்தீப் ஆகியோர் இளைய சகோதரியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். அதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர் மூத்த சகோதரியின் உதவியுடன் அந்தச் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை

அதன் பின்னர், அப்படியேவிட்டால் பிரச்னையாகிவிடும் என்று சிறுமியை துப்பட்டாவைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இந்தக் குற்றம் நடக்கும்போது யாராவது வந்துவிடக்கூடும் என்பதற்காக கரும்புத் தோட்டத்துக்கு வெளியில் தீபு, அர்ஜுன் ஆகியோர் பாதுகாப்புக்கு நின்றனர். குற்றத்தில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்” என்று தெரிவித்தார். சொந்தச் சகோதரியே தம் சகோதரியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யவைத்து கொலைசெய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/the-woman-who-gang-raped-and-murdered-her-sister-by-lovers-after-discovering-a-fake-relationship

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக