எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றங்களை தடுத்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து மக்களை காக்க வேண்டிய காவல்துறையினரே குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. மதுரை அருகே சிலைமான் காவல் நிலைய காவலர் சதீஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் அங்காடி மங்கலத்தை சேர்ந்த சதீஷ்குமார், சிலைமான் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் எட்டு வயது சிறுமி ஒருவரை அடிக்கடி அழைத்து பேசியுள்ளார். அப்போது அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைப்பற்றி தன் தாயாரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Also Read: மயிலாடுதுறை: வீட்டில் இருந்த சிறுமி; சிறார் வதை கொடுமை! - போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது
இதைப்பற்றி தீவிர விசாரணை நடத்திய சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர், புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்து காவலர் சதீஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
தங்கள் குழந்தைகள், பாதிக்கப்பட்டால் பெற்றோர்கள் துணிச்சலாக காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும், அல்லது அவசர உதவி எண்ணில் புகார் தெரிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/madurai-police-man-arrested-in-pocso-act
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக