Ad

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

Tamil News Today: `ஒரு மாதம் பரோல்’ - இன்று வெளியே வருகிறார் நளினி!

இன்று வெளியே வருகிறார் நளினி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவர் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவருகிறார்கள். இவர்கள் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் தன்னை அருகிலிருந்து கவனித்துக்கொள்வதற்காகத் தன் மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று அவர் தாயார் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நளினிக்கு பரோல் கொடுக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது. இதனை தொடர்ந்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது

வேலூர் பெண்கள் சிறையிலிருக்கும் நளினி ஒரு மாத பரோலில் இன்று வெளியே வருகிறார். காட்பாடி பிரம்மபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவிலிருக்கும் குடும்ப நண்பரின் வீட்டில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடைசியாக, 2019-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி ஒரு மாத பரோலில் வெளிவந்திருந்தார் நளினி.

-லோகேஷ்வரன்



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-27-12-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக