Ad

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

புதுக்கோட்டை: ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ! - மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கடந்த நவம்பர் 21-ம் தேதி அதிகாலை திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ பூமிநாதன்(50) ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற போது அவர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உடனே, தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய தஞ்சாவூர் மாவட்டம் தோகூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கடந்த நவம்பர் 22-ம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் திருமயம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட பின்பு புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பூமிநாதன்

இதற்கிடையே தான், மணிகண்டன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தால், தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனிடையே, காவல்துறை அதிகாரியை கொலை செய்த மணிகண்டனைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். பரிந்துரையை ஏற்று அதன்பேரில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதையடுத்து, மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.



source https://www.vikatan.com/news/crime/pudukottai-ssi-murder-accused-arrested-under-gundas-act

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக