Ad

திங்கள், 29 நவம்பர், 2021

Tamil News Today: 12 மணிநேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! - இந்திய வானிலை ஆய்வு மையம்

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, தொடர் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 12 மணிநேரத்தில் தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமான மாறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மழை

இதனிடையே, மழை காரணமாக தூத்துக்குடி, திருவள்ளுர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மவ்வட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, கடலூர், நீலகிரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-30-11-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக