Ad

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

``இதுபோன்ற சம்பவம் நடக்கும் என நினைத்ததில்லை; நாடு நரகத்தை நோக்கிச் செல்கிறது" - டொனால்டு ட்ரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் பிரபல ஆபாச நடிகைக்குப் பணம் கொடுத்தது, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரம் உள்ளிட்ட 34 வழக்குகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், நேற்று கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, தனது ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்களிடம் உரையாற்றினார். அப்போது, "அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவம் நடக்கும் என்றோ, அல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது என்றோ நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

டொனால்ட் டிரம்ப்

நான் செய்த ஒரே குற்றம், நாட்டை அழிக்க நினைப்பவர்களிடமிருந்து அச்சமின்றி காப்பாற்றியதுதான்.  அமெரிக்க வரலாற்றிலேயே இருண்ட நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, குறைந்தபட்சம் இந்த தருணத்திலாவது, நான் உற்சாகத்துடன்தான் இருக்கிறேன் என உறுதியாக கூறுகிறேன்.  ஆப்கானிஸ்தானிலிருந்து நமது ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதற்காகவும், நமது எல்லைகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் திறந்திருப்பதாலும், ஏற்கனவே உலகம் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறது. மொத்தத்தில் நமது நாடு நரகத்தை நோக்கிச் செல்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/the-only-crime-ive-committed-donald-trumps-attack-on-biden

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக