Ad

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

திருப்பூர்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு; 10 பேர் காயம் - 15 வாகனங்கள் சேதம்

திருப்பூர் மாநகரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் விறகுகளை ஏற்றிக் கொண்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மதுரையைச் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டி வந்தார். திருப்பூர் குமரன் சாலை வழியாக வரும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடத் தொடங்கியது. அப்போது முன்னால் சென்ற வாகனங்கள் மீது மோதியது. ஓட்டுநர் முருகன் லாரியை நிறுத்த முயன்றும் முடியவில்லை.

விபத்து

லாரியை சாலையோரமாக நிறுத்த முயன்றபோது அங்கு இருந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 5-க்கும் மேற்பட்ட கார்கள் மீது லாரி மோதியது. இதில் காங்கேயம் சாலையைச் சேர்ந்த கோயில் பூசாரி கண்ணன் என்பவர் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.

விபத்து

இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லாரி அங்குள்ள டிரான்ஸ்பார்மரில் மோதி நின்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனப்பி வைத்தனர்.

லாரி ஓட்டுநரிடம் போலீஸார் விசாரித்ததில், பிரேக் பிடிக்காததால் லாரியை நிறுத்த முடியாமல் போனதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



source https://www.vikatan.com/crime/accidents/break-failure-lorry-hit-one-death-10-injured-in-tiruppur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக