Ad

சனி, 15 ஏப்ரல், 2023

சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; இருவர் பலி... இருவர் படுகாயம்! - சோகத்தில் மக்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டி பகுதியில் பிரவீன் ராஜா என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40-க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் அனைவரும் பணி செய்துகொண்டிருந்தனர். அப்போது ஓர் அறையில் 'தரைச்சக்கரம்' செய்வதற்கு மருந்து செலுத்தியபோது ஏற்பட்ட உராய்வினால், வெடிவிபத்து ஏற்பட்டது.

மீட்பு

இந்த விபத்தில் ஓர் அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அந்த அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த இடையன்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, தங்கவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கருப்பம்மாள், மாரித்தாய் ஆகிய இரண்டு பெண் தொழிலாளர்கள் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீட்பு

இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து வெடி விபத்து சம்பவம் குறித்து மாரனேரி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/crime/two-labors-died-in-a-cracker-factory-explosion-accident-in-sivakasi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக