Ad

புதன், 19 மே, 2021

Vikatan Poll: ம.நீ.ம கட்சியில் இருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்களே... உங்கள் கருத்து?

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியில் பலதரப்பட்ட பிரச்னைகள். மகேந்திரன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு உட்படக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விலகினர்.

இந்நிலையில் நேற்று, "மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்று சொல்லிவந்த கமல், தற்பொழுது எனது கட்சி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். கட்சியில் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலை தூக்கிவிட்டது. இனியும் இந்த கட்சியிலிருந்து எந்த புண்ணியமும் இல்லை" என்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதோடு கமல் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருக்கிறார் முருகானந்தம்.

இது குறித்து இங்கே படிக்கலாம்...

Also Read: `மநீம-வில் சர்வாதிகாரம் தலைதூக்கிவிட்டது' - கமல் மீது புகார்; பொதுச் செயலாளர் முருகானந்தம் விலகல்!

ம.நீ.ம-வில் தொடர்ந்து நிகழும் இந்தப் பதவி விலகல் குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்...
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...


source https://www.vikatan.com/government-and-politics/politics/vikatan-poll-regarding-kamal-haasans-makkal-needhi-maiam-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக