Ad

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

இராமநாதபுரம்: குடிபோதையில் துன்புறுத்தல்! -மாற்றுத்திறனாளி கணவனை எரித்துக் கொன்ற மனைவி

இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே முனுசுவலசை கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் முனியசாமி(வயது 42). இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மல்லிகா. கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் . இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்

முனியசாமி

முனியசாமி தினமும் குடித்து விட்டு மல்லிகாவை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மனமுடைந்த மல்லிகா, முனியசாமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். மேலும் போலீசார் சந்தேகமடையாமலிருக்க குடிசை வீட்டிற்கும் தீ வைத்தார்.

மல்லிகா

முனியசாமி உடல் கருகிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து கேணிக்கரை போலீஸார் அவரது உடலை கைப்பற்றி இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில் முனியசாமி தினமும் போதையில் துன்புறுத்தியதால் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்றது தெரிய வந்தது . இதன்படி மல்லிகாவை கேணிக்கரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் .



source https://www.vikatan.com/news/crime/ramanathapuram-physically-challenged-husband-burnt-to-death-by-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக