Ad

புதன், 27 அக்டோபர், 2021

Tamil News Today: `பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசத் துரோக வழக்கு!’ - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

`பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசதுரோக வழக்கு!’ - யோகி

இந்தியா-பாகிஸ்தான் அணி

டி20 உலகக் கோப்பை க்ரூப் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இந்தியாவில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலத்தில் இதுவரை பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடியதாகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகவும் 7 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேசதுரோக வழக்கு பாயும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-28-10-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக