Ad

வியாழன், 28 அக்டோபர், 2021

ஊட்டி: பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி.. மாணவியிடம் அத்துமீறய இளைஞர் போக்சோவில் கைது!

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (28), கூலித்தொழிலாளி. சதீஷின் மனைவி கர்ப்பமாக இருப்பதால், பிரசவத்திற்காகக் கொடைக்கானலில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சதீஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்படதாக கல்லூரி மாணவி ஒருவர் பெற்றோருடன் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவரின் புகாரைப் பெற்றுக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், சதீஷ் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, போலீஸார் சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலியல் அத்துமீறல்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், "ஏற்கெனவே திருமணமான சதீஷுக்கும் 17 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. மாணவியின் வீட்டுக்கு சதீஷ் அடிக்கடி சென்று வந்ததுடன், வெளியிடங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது அந்த மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் விசாரித்தபோது, சதீஷ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

Also Read: புதுச்சேரி: `40 பேர் மீது போக்சோ’ - பாலியல் தொழிலில் சிறுமி ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் அதிரடி

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சதீஷை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறோம். சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மனைவி பிரசவத்துக்காகத் தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில், மாணவியுடன் பழகி ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. சதீஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டோம். அந்த கல்லூரி மாணவி தற்போது காப்பகத்தில் இருக்கிறார்"என்றார்.



source https://www.vikatan.com/news/crime/ooty-youth-arrested-in-pocso-case-after-college-student-complaints

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக