Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

"பை... பை... மஹா!" - `நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலிருந்து விலகுகிறாரா ரச்சிதா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் 'நாம் இருவர் நமக்கு இருவர்'. இந்தத் தொடரில் நாயகியாக நடிப்பவர், ரச்சிதா. தற்போது அவர் அந்தத் தொடரிலிருந்து வெளியேறியிருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே ரச்சிதா, அந்தத் தொடர் யூனிட்டில் சிலருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாயின.

ரச்சிதா

ஆனால், ரச்சிதாவும், சேனல் தரப்பும் அதுகுறித்த எந்த விளக்கத்தையும் கூறவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் ரச்சிதா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "சில வதந்திகளுக்காக நான் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இருந்து விலகியதாக சொல்ல முடியாது. போற வரைக்கும் போவோம்! தானா ஸ்டாப் ஆச்சுன்னா பார்த்துக்கலாம். அதுவரைக்கும் என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க! இதை ஒரு பெரிய செய்தியாக்குறதுனால எந்த பயனும் இல்ல. 'நாம் இருவர் நமக்கு இருவர்' விட்டு போறேன்... போறேன்னு சொல்லி சொல்லி என்னை நீங்களே போக வைச்சிடுவீங்க போலயே!

Also Read: ''நல்லவளை கெட்டவளா மாத்துறாங்க?'' - 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில் இருந்து வெளியேறிய ரச்சிதா?

நமக்கு அடி ஒண்ணும் புதுசில்லையே... பார்க்கலாம் என்ன தான் நடக்குதுன்னு! சப்போர்ட் பண்ண நீங்க எல்லாம் இருக்கீங்களே எது நடந்தாலும் பார்த்துக்கலாம்!" எனப் பதிவிட்டிருந்தார்.

ரச்சிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி

இந்தச் சூழலில் தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ரச்சிதா. 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மஹா. அந்தப் பெயரைக் குறிப்பிட்டு "பை மஹா" என அதிகாரபூர்வமாக தொடரில் இருந்து விலகுவது குறித்து பதிவு செய்திருக்கிறார்.

தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அம்மன்' தொடரில் அம்மனாக ரச்சிதா நடித்துவருகிறார்.


source https://cinema.vikatan.com/television/actress-rachitha-quits-from-naam-iruvar-namakku-iruvar-serial

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக