Ad

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

Tamil News Today: 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறப்பு! - தொடர் கனமழையால் 6 மாவட்டங்களில் விடுமுறை!

தொடரும் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை!

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மாநிலத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வருகிறது. அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தினங்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம்

தமிழ்நாட்டில், கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கனமழை காரணமாக, வேலூர், நெல்லை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-01-11-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக