Ad

புதன், 12 ஜூலை, 2023

தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம் | பெண் யானை உயிரிழப்பு - News In Photos

ஈரோடு: மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மனுநீதி நாள் முகாமில் தாளவாடி வட்டம், பழைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கோவை: மாங்கரை அருகே உள்ள தடாகம் பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை.
விருதுநகர்: தக்காளி, வெங்காயம் , பச்சை மிளகாய், இஞ்சி உள்ளிட்ட பொருள்களை ரேஷன் கடை மூலமாக வழங்க கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது
விருதுநகர்: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் அரசாணை உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி, நகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு தொழிற்சங்க நகர் குழு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது‌.
நாகர்கோவில்: ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக நாகர்கோவிலில் உள்ள காங்கிரஸ் கட்சி எம்.பி., அலுவலகம் முன்பு வாயில் கறுப்பு துணி கட்டி சத்தியகிரக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.
நாகர்கோவில்: தக்காளி விலை ஏற்றத்தால் கோட்டார் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு இன்று மலிவு விலையில் தக்காளி விநியோகிக்கப்பட்டது.
நாகர்கோவில்: ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி: தனியார் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ- பேருந்து மோதிய விபத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனையில் குணமடைந்து கவர்னர் தமிழிசையைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
புதுச்சேரி: எதிராளிகளை கொலைசெய்யும் நோக்குடன் வெடிகுண்டு மற்றும் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை முதலியார்பேட்டை போலீஸார் கைதுசெய்து, வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி: போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார்
புதுச்சேரி: ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பெண் காவலர்களின் மகப்பேறு விடுமுறை கோரிக்கையினை ஏற்று உடனே நிறைவேற்ற துறை சார்ந்த அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.
வைகோ தலைமையில் நிலைக் குழு கூட்டம் மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
விழுப்புரம்: 100 நாள் வேலைத் திட்டத்தில் குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்று வந்த நிலையில், ஓய்வு நேரத்தில் ஓய்வு எடுக்கும் பெண்கள்
வேலூர்: மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.
திருநெல்வேலி: தூய்மைப் பணியாளர்களுக்கு நிரந்தர ஊதியத்தினை வழங்கக் கோரி சி.ஐ.டி.யூ சார்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சென்னை: ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரம்: காங்கிரஸார் மெளனப்போராட்டம்.
வேலூர்: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்றது
தேனி: தேங்காய் கொள்முதல் விலையை அதிகப்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்து போராட்டம்.
இராமநாதபுரம்: உச்சிப்புளியில் தேங்காய் கொப்பரைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தென்னை விவசாயிகள் தேங்காய் உடைப்பு போராட்டம் நடத்தினர்.
ஈரோடு: தமிழ்நாடு நாள் விழாவையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது
பட்டுக்கோட்டை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்துப் போராட்டம்.
ராமநாதபுரம்: அரசுப் பேருந்து ஓட்டுநரை பயணி தாக்கியதால், பாதுகாப்பு கோரி பணிமனையில் அமர்ந்து, ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்: கூட்டுறவுத்துறை சார்பில் நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. நியாய விலை கடையில் கிலோ தக்காளி 90 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், கடலூரில் உள்ள காய்கறி மார்க்கெட்டிலும் பிற காய்கறி கடைகளிலும் அதே 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் வேதனை.
திருச்சி: சர்வதேச விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது
விழுப்புரம்: வீட்டு வசதி வாரிய அரசு குடியிருப்பு பகுதியில் மழைக்காலங்களில் அதிகமாக விரிசல் ஏற்பட்டு வருவதால் உடனடியாக சரி செய்து தர அரசு அலுவலர்கள் வேண்டுகோள்
விழுப்புரம்: நகர்மன்றக் கூட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நகராட்சிக் கழிவறையை திறக்க வலியுறுத்தல்.


source https://www.vikatan.com/government-and-politics/politics/important-happenings-around-tamilnadu-vikatan-news-in-photos-12-07-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக