Ad

ஞாயிறு, 23 ஜூலை, 2023

முதல் மனைவியின் ரீல்ஸைப் பார்த்துக் கொண்டிருந்த கணவர் - பிறப்புறுப்பை அறுத்த 2-வது மனைவி

ஆந்திர மாநிலம் நந்திகமவில் உள்ள ஐயப்பா நகரில் பெண் ஒருவர், முன்னாள் மனைவியின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பார்த்த தன் கணவன் மீது ஆத்திரத்தில் செய்த வெறிச்செயல் ஒன்று தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது.

இன்ஸ்டாகிராம்

இந்த சம்பவம் தொடர்பாக வெளியான தகவலின்படி, முப்பல்லா கிராமத்தைச் சேர்ந்த கோட்டா ஆனந்த் பாபு என்பவர், தன்னுடைய முதல் மனைவியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர், வரம்மா என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். ஐந்து மாதங்களாக ஆனந்த் பாபுவும், வரம்மாவும் முப்பல்லா கிராமத்தில் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மாலை, ஆனந்த் பாபு தன்னுடைய முதல் மனைவியுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸை செல்போனில் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். இதனைப் பார்த்த வரம்மா, தன்னுடைய கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்ற, வரம்மாவை மிகவும் கோபப்படுத்தியிருக்கிறது. அப்போது வரம்மா ஆத்திரத்தில் தன் கணவருடைய பிறப்புறுப்பை பிளேடால் (blade) வெட்டிவிட்டார்.

கத்தி

இதனால், ஆனந்த் பாபுவின் பிறப்புறுப்பில் கடுமையான ரத்தக்கசிவு ஏற்படவே, உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டார். ஆனந்த் பாபு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.



source https://www.vikatan.com/crime/wife-cuts-her-husband-genital-part-for-he-saw-his-ex-wife-instagram-reels-in-andhra

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக