Ad

புதன், 20 ஏப்ரல், 2022

டி.வி-யில் சத்தம் குறைப்பது தொடர்பாகத் தகராறு - முதியவர் மீது ஆசிட் அடித்த கோவை இளைஞர் கைது

கோவை செல்வபுரம் அடுத்துள்ள சொக்கம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (70). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தார்.

டி.வி

அப்போது, சம்பத் டி.வி-யில் அதிகமாகச் சத்தம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது வீட்டின் அருகில் வசிக்கும் வீரமணி (30) என்பவர் சம்பத்தின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

பிறகு சம்பத்திடம், டி.வி-யின் சத்தத்தைக் குறைக்குமாறு கூறியிருக்கிறார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் தகராறு முற்றியுள்ளது.

வீரமணி

இதில், ஆத்திரமடைந்த வீரமணி ஆசிட்டை எடுத்து சம்பத் முகத்தில் வீசியுள்ளார். இதை முற்றிலும் எதிர்பார்க்காத சம்பத், கீழே விழுந்தார்.

சம்பத்தின் முகம், வாய், கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கைது

இது குறித்து சம்பத் செல்வபுரம் காவல்துறையில் புகாரளித்தார். அந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, வீரமணியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.



source https://www.vikatan.com/news/crime/coimbatore-youth-arrested-for-acid-attack

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக