Ad

புதன், 20 ஏப்ரல், 2022

தெலங்கானா விடுதியில் தாய், மகன் தீக்குளித்து தற்கொலை: டி.ஆர்.எஸ் கட்சியினர் 6 பேர் கைது!

தெலங்கானா மாநிலம், கமரெட்டி என்ற இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தவர் கங்கம் சந்தோஷ். இவரும், இவரின் தாயார் பத்மாவும் கடந்த 16-ம் தேதி அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு சந்தோஷ் தங்கள் தற்கொலைக்கு டி.ஆர்.எஸ் கட்சி நிர்வாகிகள் ஆறு பேர், இன்ஸ்பெக்டர் நாகார்ஜுனா ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களின் தொடர் துன்புறுத்தல் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுப்பதாக வீடியோவில் பதிவுசெய்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதோடு தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதிவைத்துள்ளார். அதிலும், ஏழு பேரும் சேர்ந்து தன்னைத் தொழில் செய்யவிடாமல் தடுத்ததாகவும், இதனால் தான் கடுமையான நிதி நெருக்கடிக்கு தள்ளப்பட்டதாகவும், தாங்கள் இறந்த பிறகாவது தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சந்தோஷ் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் மற்றும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த வீடியோவின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள ரமயம் பேட் நகராட்சி கவுன்சில் தலைவர் ஜிதேந்தர் கௌட் உட்பட ஏழு பேர் மீதும் இருவரையும் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு அவர்கள் ஏழு பேரையும் கைதுசெய்துள்ள போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். இருவர் தற்கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும், கைதுசெய்யப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்ட சந்தோஷுக்கு எந்த மாதிரியான இன்னல்களைக் கொடுத்தனர் என்பது குறித்து விசாரித்துவருவதாக போலீஸார் தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/crime/mother-son-commit-suicide-in-telangana-6-trs-cadres-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக