Ad

புதன், 30 செப்டம்பர், 2020

`ரஷ்ய அதிபரின் கைப்பாவை... புத்திசாலி இல்லை!'- அனல்பறந்த ட்ரம்ப் - ஜோ பைடன் நேரடி விவாதம்

அமெரிக்காவில் வரும் நவம்பர் மூன்றாம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து 35 நாள்களுக்கு முன்னர் தொடங்கிய முதல் விவாதித்திலேயே தேர்தலுக்கான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் எதிர்பார்த்ததுபோல ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சியின் வேட்பாளர் ட்ரம்ப் இருவருக்கும் இடையேயான விவாதம் காரசாரமாக அமைந்தது. கொரோனா காரணமாக இரு போட்டியாளர்களும் சம்பிராதயப்படி கைகுலுக்கி கொள்ளவில்லை. மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கில் அதிகப்படியான பார்வையாளர்ளுக்கு விவாத இடத்திற்கு வர அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் மக்களின் எந்த ஆராவரமும் ஆர்பரிப்பும் இன்றியே கிளைவ்லேண்டில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதல் கேள்வியாக மறைந்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரூத் பாடர் கின்ஸ்பார்க்கு பதிலாக, ட்ர்ம்ப் ஏமி கானி பாரட்டை பரிந்துரைத்ததை நெறியாளர் ஃபாக்ஸ் நியூஸ் கிறிஸ் வாலெஸ் முன்வைத்தார். இதற்கு ட்ர்ம்ப், ``நாங்கள் தேர்தலில் வென்றோம். தேர்தலுக்கு பின் நிச்சயம் பாதிப்புகள் இருக்கும். எங்களிடம் செனட் மற்றும் வெள்ளை மாளிகை உள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிக்கான தனித்துவமான வேட்பாளரும் எங்களிடம் உள்ளார்'' என்றார். இதற்குப் பதிலளித்த வகையில் ஜோ பைடன் `தேர்தல் முடிந்து யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார்.

டொனால்ட் ட்ரம்ப்

இந்த விவாதத்தின் முக்கிய பேசுபொருளாக அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அமைந்தது குறிப்பிடத்தக்கது. `இதையடுத்து சுகாதாரம் தேவைபடுபவர்களுக்கு அதிபர் ட்ரம்பால் எந்த பயனும் இல்லை. இங்கு அனைவருக்கும் ட்ரம்ப், எப்போதும் பொய் பேசுபவர் என்று தெரியும் என்றார்'. இதற்கு பதிலளிக்கும் வகையில், ட்ர்ம்ப் அவரது சுகாதாரத் திட்டங்களை விளக்க, இதைப்பற்றி எந்தவிதமான திட்டமும் இல்லாமல் ட்ர்ம்ப் பேசுகிறார் என்றார் ஜோ பைடன்.

Also Read: `கொரோனா உயிரிழப்புகளின் நேரடி எண்ணிக்கையை இந்தியா அளிப்பதில்லை!'- ட்ரம்ப் #NowAtVikatan

ஒரு கட்டத்தில் விவாதமானது இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட மோதலாக உருவெடுத்தது. ஜோ பைடன் பேசுகையில் ட்ரம்ப் அடிக்கடி குறுக்கீடு செய்யவே, அவரை வாயை மூடி இருக்குமாறு சாடினார் பைடன். அதே சமயம் இது அதிபருக்கான பண்பில்லை என்றும் கூறினார். பின்னர், ட்ரம்ப் வருமான வரி செலுத்தாமல் இருப்பதை பற்றி விவாதம் எழுந்தது. அதற்கு ட்ரம்ப் 2016-ம் ஆண்டு முதல் பல நூறு மில்லியன் டாலர்களுக்கும் மேல் வருமான வரி கட்டியுள்ளதாகத் தெரிவித்தார். இதற்கான ஆதாரத்தை பற்றி நெறியாளர் கிரிஸ் வாலஸ் கேட்டபோது "நீங்கள் பார்ப்பீர்கள் "என்பது மட்டுமே ட்ரம்பின் பதிலாக அமைந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஜோ பைடன், ``அதிபர் ட்ரம்ப் வரி செலுத்துவது தொடர்பான சட்டங்களைத் தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்துகிறார். அவர் ஒரு பள்ளி ஆசிரியரை விட குறைந்த அளவிலான வரியே கட்டுகிறார்'' என்று குற்றஞ்சாட்டினார். இதற்கு ட்ரம்ப்,``எல்லா தொழிலதிபர்களும் அதையே செய்வார்கள், அவர்கள் முட்டாளாக இல்லாத வரை.. அதையே நானும் செய்தேன்'' என்றார்.

ஜோ பைடன்

இந்த விவாதத்தில் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடினின் கைப்பாவை என்று நேடியாக விமர்சித்தார் ஜோ பைடன். ஆப்பிரிக்க - அமெரிக்கர்களை குறிப்பிட்டு பேசிய பைடன், ``ட்ரம்ப் ஆப்ரிக்க அமெரிக்கர்களின் பாதுகாவலரா?.. இந்த மனிதர் அவர்களுக்காக எதுவும் செய்யவில்லை. இதுவரை ஆயிரத்தில் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இவர் எதுவும் செய்யாமல் இப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் அந்த எண்ணிக்கை 500-ல் ஒருவராக மாறும்'' என்றார். ஜோ பைடனைப் பார்த்து ட்ரம்ப், `நீங்கள் ஒன்றும் புத்திசாலி இல்லை' என்று விமர்சித்தார்.

இறுதியாக இந்த விவாதம் இருவரின் குடும்ப உறுப்பினர்களையும் விமர்சனம் செய்யும் அளவிற்கு நீண்டது. அக்டோபர் 15, அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் இருவருக்குமிடையிலான அடுத்த இரண்டு விவாதங்கள் நடைபெற உள்ளன.



source https://www.vikatan.com/government-and-politics/international/russian-presidents-puppet-joe-biden-criticizes-us-president-trump

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக