Ad

திங்கள், 28 செப்டம்பர், 2020

குழந்தைகளைத் தீவைத்துக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்! - மதுரை அதிர்ச்சி

குடும்பப் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு தீவைத்து, தனக்கும் தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் செயல் மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இதில் இரண்டு குழந்தைகளும் பலியாகியிருப்பது வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை

மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்த பாண்டிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்விக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வரணிஸ்ரீ, வர்ணிகாஸ்ரீ என இரு பெண் குழந்தைகள். பாண்டிக்கும் தமிழ்செல்விக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று இரவு தமிழ்ச்செல்வி தூங்கிக்கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துவிட்டு, தன் மீதும் தீவைத்துக்கொண்டிருக்கிறார்.

இவர்களின் அலறல் சத்தம் அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்குக் கேட்க, அவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். இதில் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகியிருந்தனர்.

தற்கொலை

மிகவும் ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்செல்விக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

Also Read: சென்னை: `நான் தற்கொலை செய்யப்போகிறேன்' - மனைவிக்கு போன் செய்துவிட்டு உயிரை மாய்த்த போலீஸ் எஸ்.ஐ

என்ன காரணத்துக்காக அவர் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றார் என்பது பற்றி கணவரிடமும், அந்தப் பகுதி மக்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்துவருகின்றனர். குடும்பத் தகராறில் தமிழ்ச்செல்வி குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்கொலை

இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைத் தீவைத்துக் கொன்று, தற்கொலைக்கு முயன்ற தாயின் செயல் மதுரை மக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இது தொடர்பாக திடீர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறார்கள்.



source https://www.vikatan.com/social-affairs/crime/mother-kills-daughters-and-tried-to-commit-suicide-in-madurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக