Ad

திங்கள், 6 நவம்பர், 2023

Tamil News Today Live: மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தொடங்கியது வாக்குப்பதிவு!

மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தொடங்கியது வாக்குப்பதிவு!

ANI

மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடைபெறும் மிசோரம் மாநிலம் முழுவதும் 1,276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கரில் முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் 5,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மொத்தம் 60 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மிசோரமில் 40 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மிசோரமில் 3,000 போலீஸாருடன் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த 450 குழுக்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். நக்சல் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/general-news/tamil-news-today-live-updates-dated-on-07-11-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக