Ad

வெள்ளி, 10 நவம்பர், 2023

`விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாகக் கொடுங்கள்!' - கேரளப் பெண்ணுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் அளித்த புகாரில், அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில், 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பியளித்துவிட்டு, மீதிப் பணத்தைத் தராமல் மிரட்டுவதாகத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின. ஷர்மிளாவும் இது குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஷர்மிளாவுக்கு எதிராக விஜயபாஸ்கர் மான நஷ்டஈடு கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நேற்று நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயபாஸ்கர் தரப்பில் நித்யேஷ் நட்ராஜ், வைபவ் வெங்கடேஷ், அனிருத் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

ஷர்மிளா - விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

வாதங்கள் நிறைவடைந்த பின்னர் நீதிபதி, ``அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். அவர்மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக் கூடாது. அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக ஒரு கோடி ரூபாயை மான நஷ்டஈடாக ஷர்மிளா செலுத்த வேண்டும். மேலும், சமூக வலைதளங்களில் சி.விஜயபாஸ்கர் குறித்து ஷர்மிளா பதிவிட்டவற்றையும் நீக்க வேண்டும். ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தால், அவற்றையும் நீக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/madras-high-court-orders-a-woman-to-give-rs-1-crore-as-defamation-compensation-to-vijayabaskar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக