Ad

வியாழன், 23 பிப்ரவரி, 2023

விளையாட்டுப் போட்டியில் தோல்வி: ஏளனமாக சிரித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: சிறுமி உட்பட 7 பேர் பலி!

பிரேசிலின் மடோ கிராஸோ மாகாணத்தில், உள்ள சினோப் சிட்டியில் பில்லியர்ட்ஸ் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் எட்கர் ரிக்கார்டோ டி ஒலிவேரா என்பவர் ஒரு போட்டியாளருடன் விளையாடியிருக்கிறார். ஆனால், அந்தப் போட்டியில் அவர் தோற்றுவிட்டார். இரண்டாவது முறை விளையாடியும், அவர் தோற்றுவிட்டார் எனத் சொல்லப்படுகிறது. அதைப் பார்த்த பார்வையாளர்கள் ஏளனமாக சிரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஒலிவேராவும், அவருடன் இருந்த எஸேகியாஸ் சௌசா ரிபேரோ என்பவரும் துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டியிருக்கின்றனர்.

 நீச்சல் குளம்!

தன்னைப் பார்த்து சிரித்தவர்களைப், எட்கர் ரிக்கார்டோ டி ஒலிவேரா துப்பாக்கியால் சாரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதற்கு துணையாக எஸேகியாஸ் சௌசா ரிபேரோ-வும் இருந்திருக்கிறார். துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே 12 வயது சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக பலியானார்கள். அங்கிருந்தவர்கள் ஒருவரை மட்டும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இந்த சம்பவம் அனைத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறத்து. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் காவல்துறை தேடிவருகிறது.



source https://www.vikatan.com/crime/brazilian-man-kills-7-after-being-laughed-at-for-losing-at-pool

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக