Ad

சனி, 28 ஜனவரி, 2023

ம.பி., ராஜஸ்தானில் விமானப்படை விமானங்கள் விபத்து - ஒரே நாளில் நடந்த இரு அதிர்ச்சி சம்பவங்கள்

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் விமான தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுகோய்-30, மிராஜ் 2000 எனும் இரண்டு பயிற்சி விமானங்களும் மொரேனா அருகே மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த விபத்து காலையில் நடந்ததாக மொரேனா ஆட்சியாளர் தெரிவித்திருக்கிறார். மேலும், சுகோய்-30-ல் இருந்த விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்குச் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதே போன்று, ராஜஸ்தான், பரத்பூரில் விமானப்படையின் ஜெட் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. இது தொடர்பக பரத்பூர் மாவட்ட ஆட்சியர் அலோக் ரஞ்சன், "சார்ட்டர் ஜெட் விமானம், பரத்பூர் அருகே விபத்துக்குள்ளாகியிருக்கிறது. மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறோம். அடுத்தகட்ட விசாரணைக்குப் பின்பே மேலதிகத் தகவல்கள் வெளிவரும்" எனத் தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/accident/chartered-plane-crashes-in-rajasthans-bharatpur

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக