Ad

திங்கள், 30 ஜனவரி, 2023

``குடிப்பதை விட்டுவிட்டேன்... ஆனால், அந்தப் பழக்கத்தை மட்டும் விடமுடியவில்லை’’ வருத்தப்பட்ட தீபக்!

நம் நாட்டில் வங்கித்துறை தொடர்பானவர்களுக்கு தீபக் பரேக் பற்றி தெரியாமல் இருக்க முடியாது. ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனின் (HDFC) தலைவரான அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது...

ஹெச்.டி.எஃப்.சி வங்கி - சித்திரிப்பு படம்

``என் வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான விதிகள் பலவற்றையும் மீறியுள்ளேன். கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவும் மது பானம் குடித்து அனுபவித்திருக்கிறேன். ஆனால், 2021-ம் டிசம்பரில் எனக்கு கோவிட்-19 வந்து, அதனுடன் போராடியபோது நான் மதுவின் மீது இருந்த ஆர்வத்தை இழந்தேன். இப்போது என் நண்பர்கள் மது குடிக்கும்போதுகூட, நான் எலுமிச்சை பானத்தை மட்டுமே குடிக்கிறேன்’’ என்று சொல்லி இருக்கிறார் தீபக் பரேக்.

78 வயதான் தீபக் பரேக் மதுப் பழக்கத்தை கைவிட்டாலும், அவர் கைவிட நினைத்து, இன்று வரை அதைச் செய்ய முடியாத பழக்கம் ஒன்று உள்ளதாகவும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். அது என்ன பழக்கம்.

Sudoku

``ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன், சுடோகு விளையாடுவதை மட்டும் என்னால் கைவிடவே முடியவில்லை. ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு சில நிமிடங்கள் `சுடோகு’ விளையாடுவதன் மூலம் என் மூளை கூர்மையாக வைத்திருக்க முடிகிறது. என் மனம் ரிலாக்ஸ்டாக மாறுவதற்கு இந்த சுடோகு கணக்குப் போடுவது உதவியாக இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார் தீபக் பரேக்.

78 வயதான தீபக் பரேக் தற்போது ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி இடையேயான மெகா இணைப்பு சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்தி வருகிறார். ``இந்த இணைப்பு சுமுகமாக நடந்து முடிந்தால், நான் கால் நீட்டி சுகமாக ஓய்வெடுப்பேன்’’ என்று சொல்லி இருக்கிறார்!

ஹெச்.டி.எஃப்.சி வங்கியை தீபக் பரேக் வெற்றிகரமாக நடத்தியதற்குக் காரணம், இந்த சுடோகுதானா?



source https://www.vikatan.com/business/finance/i-gave-up-drinking-but-i-couldnt-just-give-up-that-habit-said-deepak

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக