Ad

வெள்ளி, 27 ஜனவரி, 2023

சென்னை: குடும்பத்தில் எதிர்ப்பு... பிறந்த நாளன்று தோழியுடன் மாணவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னையை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையம் அருகே கடந்த 26-ம் தேதி மாலை தண்டவாளத்தின் அருகே சிறுமி ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் அருகில் இளைஞர் ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாம்பலம் ரயில்வே போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிரிழந்த சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இதுகுறித்து மாம்பலம் போலீஸார் கூறுகையில், ``சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் பெயர் இளங்கோவன் (20). இவர் மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோவனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் (14) நட்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் பழகுவதற்கு இரண்டு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் இளங்கோவனும் மாணவியும் மனவேதனையில் இருந்திருக்கிறார்கள். இந்தநிலையில்தான் இளங்கோவனுக்கு கடந்த 26-ம் தேதி பிறந்தநாள். அதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியில் வந்திருக்கிறார்கள். இறுதியாக பரங்கிமலை ரயில் நிலையம் வந்த அவர்கள் தண்டவாளத்தில் நடந்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ரயிலில் இருவரும் கைகளை கோர்த்தபடி பாய்ந்திருக்கிறார்கள். இதில் மாணவி உயிரிழந்து விட்டார். இளங்கோவன் சிகிச்சை பெற்று வருகிறார். இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/student-couple-suicide-attempt-girl-died

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக