Ad

புதன், 27 செப்டம்பர், 2023

மதுரை: மனைவி, மகளுடன் விஷம் குடித்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை - கடன் பிரச்னை காரணமா?!

மதுரை சர்வேயர் காலனியிலுள்ள ஆவின் நகரை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ், மனைவி விசாலினி, 12 வயது மகள் ரமிஷா ஜாஸ்பல் ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சமீப காலமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ரமேஷ் வீடு கடந்த இரு நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.

தற்கொலை

இந்நிலையில் இவர்கள் வீட்டிலிருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷ் மற்றும் அவரது மனைவி மகள் ஆகியோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்திய நிலையில் சடலமாக கிடந்தனர். சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

விஷம் குடித்து தற்கொலை

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் முன்னாள் ராணுவ வீரர் ரமேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததில் நஷ்டம் ஏற்பட்டு, அதனால் கடன் அதிகமானதால் குடும்பத்துடன் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மதுரை திருப்பாலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/crime/ex-service-man-suicide-along-with-family

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக