Ad

சனி, 30 செப்டம்பர், 2023

பொன்முடி சர்ச்சை: `அவர் ஒரு வாயில்லா பூச்சி’ - திமுக நிர்வாகிக்கு ஆதரவாக ஓ.பி.எஸ் அணி நிர்வாகி!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வரும் 1-ம் தேதி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மாநில ஆதிதிராவிடர் நல அணியும், சிறுபான்மையினர் அணியும் இணைந்து, நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளன. இதற்கான ஆலோசனைகளைப் பெற ஆதி திராவிடர் நலக் குழு இணை செயலாளர்கள் வி.பி ராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, அவர்களை நிற்கவைத்து பேசி அனுப்பியதாக புகைப்படம் ஒன்று வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமுகவலைதளங்களில் பரவி, அமைச்சரின் செயல்பாடு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் இதனை மாமன்னன் படத்தின் காட்சியுடன் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள்.

இந்தநிலையில் விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வி.பி.ராஜனுக்கு ஆதரவாகவும், அமைச்சர் பொன்முடிக்கு எதிராகவும் விருதுநகர் மாவட்ட ஓ.பி.எஸ்.அணியை சேர்ந்த அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், சமூகவலைதளமான ஃபேஸ்புக்கில் கண்டனம் தெரிவித்து தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

ஓபிஎஸ் உடன்..

தி.மு.க-வை சேர்ந்த மூத்த நிர்வாகிக்காக, ஓ.பி.எஸ்.அணி மாவட்ட செயலாளர் கருத்து தெரிவித்திருப்பது உள்மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது பதிவில், "விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மண்ணின் மைந்தரும், இரண்டு முறை இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி மக்களால் தேர்வு செய்யப்பட்ட சாமானியருமான அண்ணன் வி.பி. ராஜனை, தனது ஆணவப் போக்கினால் அடிமை போல் நடத்தி அவமானப்படுத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை வன்மையாகக் கண்டிக்கிறோம். பொன்முடி, சண்முகம் என இருவருமே தங்களுக்குள் ஒரு கூட்டணி அமைத்துக் கொண்டு தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களுக்கு இழுக்கை தேடித் தருபவர்கள்.

கதிரவன்

அண்ணன் வி.பி.ராஜன் 70 வயதைக் கடந்தவர். அந்த இயக்கத்தின் மாநிலப் பொறுப்பில் உள்ளவர். அவரின் வயதுக்கும், பொறுப்புக்கும் மரியாதை தந்து அவரை அமர வைத்து பேசி இருக்கலாம். அந்த நேரத்தில் பொன்முடி தன்னிலை மறந்து இருந்தாரோ? ஒரு மூத்த தலைவரை நிற்க வைத்து அவமானப்படுத்தி இருக்கிறார். ஒருவேளை அவர் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதற்காகத்தான் இப்படி பொன்முடியால் அவமானப்படுத்தப்பட்டாரோ? என்ற ஐயப்பாடு தமிழக மக்கள் அனைவர் இதயங்களிலும் எழுந்துள்ளது. எது எப்படி இருந்தாலும் அரசியல் மற்றும் மனித நாகரிகம் சிறிது கூட இல்லாமல் செயல்பட்ட பொன்முடியை வன்மையாகக் கண்டிக்கிறோம். தி.மு.க.தலைவர் கருணாநிதி, அவரின் மகன் மு.க.ஸ்டாலின், அவரின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்குத்தான் இதுவரை எல்லோரும் விசுவாசமாக இருந்தது போல் காட்டி வருகிறார்கள்.

ஆனால் அண்ணன் வி.பி.ராஜன், ஒரு மேடையில் பேசும்போது, `எனக்கென்று இறுதியாக ஒரேயொரு ஆசை உள்ளது. எங்க ஐயா இன்பநிதியையும் முதல்வராக்கி அழகு பார்த்தால் தான் என் ஆன்மா திருப்தி அடையும்’ என்று கருணாநிதியின் குடும்பத்திற்கு தனது ஒட்டுமொத்த விசுவாசத்தையும் ஒரு படி மேலாகக் காட்டியவர். அந்த வாயில்லா ஜீவனைத்தான் வாட்டி வதைத்திருக்கிறார் பொன்முடி.

வி.பி.ராஜன்

மாநில அளவில் ஓரளவுக்கு வி.பி.ராஜனுக்கு இருந்த மரியாதையை பொன்முடி கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறார். பொன்முடியைப் போன்றவர்களால் தான் தமிழக முதல்வரின் தூக்கம் கெடுகிறது. ஒரு மூத்த தலைவரை அவமானப்படுத்திய பொன்முடி போன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தமிழக முதல்வர் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள். இதை தமிழக முதல்வர் நிறைவேற்றுவாரா?" என அவர் தனது பதிவில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பேசும் திமுக-வினரோ, ``அமைச்சர் காலில் காயமடைந்து இருந்ததால் கட்டுப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தார். அதை வி.பி ராஜன் பார்த்து விசாரித்தபோது எடுக்கப்பட்ட படம் தான் வெளியே சுற்றுகிறது. உண்மையை தெரிந்து கொள்ளாமல் சிலர் வெளியே பேசுகிறார்கள்” என்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/politics/virudhunagar-ops-team-district-secretary-supports-dmk-executive-vp-rajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக