Ad

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

மகிஷாசுரமர்த்தினி: `அயிகிரி நந்தினி நந்தித மேதினி' அச்சத்தை நீக்கி தைரியம் தரும் அற்புத ஸ்லோகம்!

ஸ்லோகம் தோன்றிய விதம்: அசுரனான மகிஷனை தேவி ஆதிபராசக்தி வதம் செய்தபின்னர் கடும் கோபத்துடன் காட்சியளித்தார். தேவியின் கோபத்தைத் தணிக்கவும் சாந்தப்படுத்தவும் இந்த மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தை மஹாவிஷ்ணு பாடியதாக புராணங்கள் சில கூறுகின்றன. அதை ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் பூமியில் அருளினார் எனப்படுகிறது. மணவல்லி ராமகிருஷ்ண கவி எழுதிய பகவதிபத்ய புஷ்பாஞ்சலி ஸ்தோத்திரம் என்ற நூலில் இந்த ஸ்லோகம் இருப்பதால்இதை அவரே இயற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதைப் பொதுமக்களிடையே அதிகம் பிரபலப்படுத்தியவர் ஸ்ரீஅனந்தராம தீக்ஷிதர்.

ஸ்லோகத்தின் பயன்: 21 ஸ்லோகங்களைக் கொண்ட இந்த மஹிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தை அம்பிகையின் முன்பு பாடுவதால் சகலவிதமான அச்சங்களும் நீங்கி தைரியமும் தெளிவும் பிறக்கும் என்பார்கள் பெரியோர்கள். மேலும் 48 நாள்கள் இந்த ஸ்லோகத்தை காலையிலும் மாலையிலும் பாராயணம் செய்துவர பகை விலகும்; வம்பு வழக்குகள் நீங்கும்.

மகிஷாசுரமர்த்தினி ஸ்லோக பாடல் வரிகள்:

துர்கை

அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே

பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி

பூரிகுடும்பினி பூரிக்ருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி

துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே

த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி

கில்பிஷ மோஷிணி கோஷரதே

தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி

துர்மத சோஷிணி ஸிந்துஸுதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி ஜகதம்ப மதம்ப

கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே

சிகரி சிரோமணி துங்க ஹிமாலய

ச்ருங்க நிஜாலய மத்யகதே

மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி

கைடப பஞ்ஜினி ராஸரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி சதகண்ட விகண்டித ருண்ட

விதுண்டித சுண்ட கஜாதிபதே

ரிபுகஜ கண்ட விதாரண சண்ட

பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே

நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட

விபாதித முண்ட பதாதிபதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

அயிரண துர்மத சத்ரு வதோதித

துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே

சதுர விசார துரீண மஹாசிவ

தூதக்ருத ப்ரமதாதிபதே

துரித துரீஹ துராசய துர்மதி

தானவ தூத க்ருதாந்தமதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

அயி சரணாகத வைரிவ தூவர

வீர வராபய தாயகரே

த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி

சிரோதி க்ருதாமல சூலகரே

துமிதுமி தாமர துந்துபி நாத

மஹோ முகரீக்ருத திங்மகரே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

மகிஷாசுரமர்த்தினி

அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத

தூம்ர விலோசன தூம்ரசதே

ஸமரவிசோஷித சோணிதபீஜ

ஸமுத்பவ சோணித பீஜலதே

சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ

தர்ப்பித பூத பிசாசரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க

பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே

கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க

ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே

க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க

கடத்பஹுரங்க ரடத்படுகே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

ஸுரலலனா தததேயி ததேயி க்ருதாபினயோதர ந்ருத்யரதே

க்ருத குகுத꞉ குகுதோ கடதாதி கதால குதூஹல கானரதே

துதுகுட துக்குட திந்திமித த்வனி தீர ம்ருதங்க நினாதரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தினி ரம்யகபர்தினி ஶைலஸுதே

ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த

பரஸ்துதி தத்பர விச்வ நுதே

ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர

ஸிஞ்ஜித மோஹித பூதபதே

நடித நடார்த்த நடீ நட நாயக

நாடித நாட்ய ஸுகான ரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்

அயி ஸுமன: ஸுமன: ஸுமன:

ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே

ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ

ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே

ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர

ப்ரமர ப்ரமரா திபதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக

மல்லி தரல்லக மல்லரதே

விரசித வல்லிக பல்லி கமல்லிக

ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே

சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண

தல்லஜ பல்லவ ஸல்லலிதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

அவிரலகண்ட கலன்மத மேதுர

மத்த மதங்கஜ ராஜபதே

த்ரிபுவன பூஷண பூதகலாநிதி

ரூப பயோநிதி ராஜஸுதே

அயிஸுத தீஜன லாலஸ மானஸ

மோஹன மன்மத ராஜஸுதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

கமல தலாமல கோமல காந்தி

கலா கலிதாமல பாலலதே

ஸகல விலாஸ கலாநிலய க்ரம

கேலிசலத்கல ஹம்சகுலே

அலிகுல சங்குல குவலய மண்டல

மௌலிமிலத் பகுலாலிகுலே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

கர முரலீரவ வீஜித கூஜித

லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே

மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித

ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே

நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே

ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி

ரம்யக பர்தினி சைலஸுதே

துர்காதேவி

கடிதடபீத துகூல விசித்ர

மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே

ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர

தன்சுல ஸன்னக சந்த்ரருசே

ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித

நிர்பர குஞ்ஜர கும்பகுசே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர

கரைக ஸஹஸ்ர கரைகநுதே

க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக

ஸங்கர தாரக ஸூனுஸுதே

ஸுரத சமாதி ஸமான ஸமாதி

ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

பதகமலம் கருணா நிலயே

வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே

அயி கமலே கமலா நிலயே

கமலா நிலய ஸகதம் நபவேத்

தவ பதமேவ பரம்பதமித்

யனு சீலயதோ மமகிம் ந சிவே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு

ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்

பஜதி ஸகிம் நசசீ குசகும்ப

தடீ பரிரம்ப ஸுகானுபவம்

தவ சரணம் சரணம் கரவாணி

நதாமரவாணி நிவாஸிசிவம்

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்

ஸகலம் நனு கூலயதே

கிமு புரஹூத புரீந்துமுகீ

ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே

மமது மதம் சிவநாமதனே

பவதீ க்ருபயா கிமுத க்ரியதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

துர்காதேவி

அயி மயி தீனதயாலு தயா

க்ருபயைவ த்வயா பவித்வயமுமே

அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி

யதாஸி ததாஸனு மிதாஸிரதே

யதுசித மத்ர பவத்யுரரீ

குருதா துருதா பமபாகுருதே

ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி

ரம்ய கபர்தினி சைலஸுதே

பொருளுணர்ந்து பாட தமிழிலும் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகம்:

அம்பிகை

கிரிமகள் நந்தினி புவியெனும் மேதினி

மகிழ்வுற வரம் தரும் சங்கரியே

புதுமைகள் யாவும் நிறைந்த விநோதினி ,

நாங்கள் துதித்திடும் அந்தரியே

அழகிய விந்திய கிரிதனில்

அன்பு நிறைந்திட ஆள்பவளே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !

விஷ்ணுவின் பெருமையில் விரிபவளே

நித்தம் வெல்பவர் தொழுதிடும் வைஷ்ணவியே

பகவதியே சிவன் சுகநிதியே

ஜெகம் என்னும் ஞாலம் படைத்தவளே

மிக மிக அரியதும் பெரியதுமாகிய

செயல்களினால் அருள்புரிபவளே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !

இமை விழி இமையால் அமரரின் மேல்

வர மழையினை பொழியும் உமையவளே

தீயவர் சகலரையும் வெல்பவளே

அவர் தீ மொழி யாவும் பொறுப்பவளே

மூவுலகங்களை காப்பவளே

மனம் பூப்பவளே வினை தீர்ப்பவளே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !

மகிஷாசுரமர்த்தினி

சங்கரனுக்கு ஒரு இன்பம ளித்திடும்

மாமயிலே வெண் கடல் மகளே

நாதத்தில் ஆசை மிகுந்தவளே

கொடும் அசுரரிடம் சினமிகு கொண்டவளே

எனத ரும் அம்பா ஜெகம் தொழும்

அம்ப கதம்பவனத்தில் வளர்ந்தவளே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !

புன்னகை நித்தம் பொழிபவளே

மதுரசமென இனிமை தருபவளே

சிகரம் உயர்ந்திட ஓங்கும்

ஹிமாலய உச்சியில் அமர்ந்தவளே

மது கைடபரை மயக்கிய உருவே

இனிய லீலை செய்யும் ரஞ்சனியே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !

ஒரு சத துண்டென கஜன் முகன் மண்டையை

துண்டென விண்டுப் பிளந்தவளே

முண்டனின் அங்கம் விளங்கும்

துதிக்கையை துண்டுகள் ஆக்கி அரிந்தவளே

தண்டமெனும் உன் பொங்கும் கரங்களில்

சண்டன் முண்டனைக் கொன்றவளே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !

கஜமென எழும் பகை தலை எடுத்திடும்

சிம்மம் என சுடர் சக்தியளே

போரில் எதிர்ப்பவை யாவும் வதைத்திட

பேரிறை ஆற்றல் படைத்தவளே

நன்கு விசாரணை செய்திடும்

சிவந்தனை பகையிடம் தூதாய் அனுப்பியவளே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !

அம்பிகை

தீய வினைகளை சாய்ப்பவளே

மனம் ஏறிடும் தீமையைக் காய்ப்பவளே

தீய நினைப்புடன் பாயும் பகைதனை

மாய எழுந்திடும் மாயையளே

சரண் அடையும் பகை மனைவியர் வீரர்கள்

யாவர்க்கும் அபயம் தருபவளே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !

திரிபுவனத்திலும் எதிரி கழுத்தினில்

சூலம் நிறுத்திடும் சூலினியே

துமி துமி தும்துமி ஒலியினில்

கொடியவர் சேனையைக் கதறிட செய்பவளே

ஓம் எனும் மந்திர ஒலி எழும் கணத்தில்

தூம்ப்ரலோச்சனைக் கொன்றவளே

ஜெய ஜெயஹே மகிஷாசுர மர்த்தினி

குளிர் சடை அழகிய மலை மகளே !



source https://www.vikatan.com/spiritual/gods/spiritual-slogans-of-sri-durga-mahishasura-mardini-stotram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக