Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

பொது விருந்தில் உதயநிதி டு அண்ணாமலை யாத்திரையில் பிரமாண்ட மோடி உருவ பொம்மை! | News in Photos

திருநெல்வேலி: நற்சான்றிதழ் வாங்கிய காவல் ஆய்வாளர் ஒருவரை மற்றொரு காவல் ஆய்வாளர் மொபைலில் படம் எடுத்த போது.
விழுப்புரத்தில் 77வது சுதந்திரதின கொண்டாட்டம்
திருநெல்வேலி: 77 வது சுதந்திர தினத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மூவர்ண பலூனை பறக்கவிட்டார்.
திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவிகள் அப்துல்கலாம் வேடமிட்டு நடனமாடினர்
வேலூர் சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
நாட்டின் 77வது சுதந்திர தின விழா: அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின்
நாட்டின் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
திருநெல்வேலி: பாளையங்கோட்டை வ.உ.சி. மைத்தினத்தில் நடந்த 77 வது சுதந்திர தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவிகள் நடத்திய கலைநிகழ்ச்சியில் இந்திய வரைபடம் போன்று நின்று அசத்திய எஸ்.ஏ.வி பள்ளி மாணவிகள்.
கடலூர் பாதிரிக்குப்பத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
சுதந்திர தினம்: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கொடியேற்றுகிறார்.
திருநெல்வேலி: 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருகோயிலில் உள்ள காந்திமதி யானை கோயில் முன்பு தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் நற்சான்றிதழ் வாங்கிய காவலர்கள்
விருதுநகரில் 77 வது சுதந்திர தினத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேசிய கொடி ஏற்றிய மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் மூவர்ண பலூனை பறக்கவிட்டார்.
விருதுநகரில் 77 வது சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவியர்கள் ஜிம்னாஸ்டிக் செய்து அசத்தினர்.
விருதுநகரில் 77 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றிதழ் பதக்கமும் வழங்கினார்.
விருதுநகரில் 77 வது சுதந்திர தினத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தேசியக் கொடி ஏற்றினார்
சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் சுதந்திர தின சிறப்பு பொது விருந்தில் கலந்துக்கொண்டனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள 150 அடி உயர கொடி கம்பத்தில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அருகில், சு.திருநாவுக்கரசர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கு.செல்வபெருந்தகை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட பலர் உள்ளனர்
தூத்துக்குடியில் இருந்து விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி வழியாக மதுரைக்கு புதிதாக அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. 18 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது போதிய நிதி இல்லாத காரணத்தால் அப்பணிகளை பாதியிலேயே நிறுத்தி வைக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் (ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை திறந்து வைத்தார்
பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை என் மண்.! என் மக்கள்.! நடைபயணம்.! கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையி்ல் தொடங்கி குழித்துறை வரை கையி்ல் தேசிய கொடி ஏந்தி நடைபயணத்தில் மக்களை சந்தித்தார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை என் மண்.! என் மக்கள்.! நடைபயணத்தில் கொண்டு வரப்படும் மக்கள் புகார் பெட்டி.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை என் மண்.! என் மக்கள்.! நடைபயணத்தில் உடன் வந்த பிரமாண்ட மோடி உருவ பொம்மை.
சேலத்தில் சுதந்திர தின பள்ளிக் குழந்தைகள் கலை நிகழ்ச்சி
77 - வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் பிஆர்.பாண்டியன் காலவரையற்ற சத்தியாகிரகப் போராட்டம். இடம்: பெசன்ட் நகர், சென்னை
தஞ்சையில் 77 வது சுதந்திர தின விழாவில் காவலர் அணி வகுப்பு.


source https://www.vikatan.com/government-and-politics/politics/77-independence-day-happenings-and-annamalai-yatra-news-in-photos

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக