Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

இந்து பெண்ணுடன் சென்ற இஸ்லாமிய வாலிபர் மீது சரமாரி தாக்குதல் - மும்பை ரயில் நிலையத்தில் அதிர்ச்சி

மும்பையில் உள்ள பாந்த்ரா டெர்மினஸ் ரயில் நிலையத்தில் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒரு வாலிபர் இந்து பெண் ஒருவருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு அந்த வாலிபர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. உடனே அந்த வாலிபருடன் வந்த பெண், `அவரை அடிக்காதீர்கள்' என்று எவ்வளவோ கெஞ்சினார். ஆனால் அக்கும்பல் அடியை நிறுத்துவதாக இல்லை. ரயில் நிலையத்தில் நின்ற மற்றவர்கள் இச்சம்பவத்தை தடுக்க முன்வரவில்லை. மாறாக அனைவரும் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுப்பதில் தீவிரமாக இருந்தனர்.

வாலிபர் மீது தாக்குதல்

மேலும் அந்த வாலிபருடன் இருந்த பெண்ணிற்கு 16 வயதுதான் ஆகிறது என்று என்று கூட்டத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அந்த வாலிபரை தாக்கியவர்கள் அவரின் சட்டை காலரை பிடித்து ரயில் நிலையத்திற்கு வெளியில் இழுத்து வந்தனர். அவர்கள் ரயில் நிலையத்திற்கு வெளியில் நின்று கொண்டு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அவர்களில் ஒருவர் கேமராவை பார்த்து, `நாங்கள் இன்று இந்து பெண் ஒருவரை காப்பாற்றி இருக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு சென்றார்.

வாலிபரை அடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி இருக்கிறது. இது குறித்து ஒருவர் மும்பை போலீஸாருக்கு சோசியல் மீடியா மூலம் தகவல் கொடுத்தார். ஆனால் போலீஸார் வெகுநேரமாகியும் அந்த பதிவுக்கு எந்த வித பதிலும் கொடுக்கவில்லை. ரயில்வே டெர்மினஸில் நடந்த இச்சம்பவத்தால் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. மக்களிடம் விதைக்கப்பட்ட வெறுப்புணர்வு காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக மும்பை சமாஜ்வாடி கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது.



source https://www.vikatan.com/crime/a-barrage-of-attacks-on-a-muslim-youth-who-was-accompanying-a-hindu-woman-at-the-mumbai-railway-station

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக