Ad

வியாழன், 12 அக்டோபர், 2023

`Contempt of court'- தாக்குதலில் ஈடுபட்ட போலீஸ்; டி.கே.பாசு வழக்கைக் குறிப்பிட்டு விளாசிய நீதிமன்றம்

கடந்த ஆண்டு அக்டோபரில் (2022) கொண்டாடப்பட்ட நவராத்திரி விழாவின்போது, குஜராத்தின் கெடா மாவட்டம், உந்தேலா கிராமத்தில் நடைபெற்ற கர்பா நடன நிகழ்ச்சியில், இஸ்லாமியர்கள் சிலர் கொண்டாட்டங்களுக்கு இடையே கற்களை வீசி, கிராம மக்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளைக் காயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கல்வீச்சில் பலர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், கற்களை வீசி பலரைக் காயமடையச் செய்த குற்றத்துக்காக 13 இஸ்லாமியர்களைக் கைதுசெய்திருக்கின்றனர். இந்த நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களில் மூவரைக் காவல்துறையினர் சரமாரியாகத் தாக்குவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி, சர்ச்சையானது.

தாக்குதல்

அந்தப் பகுதி மக்களிடையே இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இத்தகைய செயலில் ஈடுபட்ட காவலர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிலர் குஜராத் நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட காவலர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட காவலர்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காமலும், ஆஜராகாமலும் இருந்திருக்கின்றனர். அதனால், அவர்கள்மீது அதிருப்தியடைந்த நீதிமன்றம், இந்த வழக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாற்றியது.

சட்டம்

அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகிய குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள், ``இந்த வழக்கில் எங்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால், அது எங்களுடைய வாழ்க்கையை மிகவும் பாதிக்கும். எனவே, எங்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.

புகார்தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு முன்வைத்திருக்கும் கோரிக்கை குறித்து, புகார்தாரர்களிடம் பேசி, அவர்கள் கருத்தை தெரிவிக்கிறேன்" எனக் கூறினார். அதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை அடுத்த திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், டி.கே.பாசு Vs மேற்கு வங்க மாநிலம் வழக்கின் தீர்ப்பின் சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைக் காவலர்கள் மீறியதாகக் குற்றம்சாட்டியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/judiciary/gujarat-flogging-4-cops-want-to-be-spared-punishment-propose-to-pay-compensation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக