மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் நேற்று நான்காம் கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பிரசாந்த் கிஷோர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசியது போல வெளியாகியிருக்கும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக தேர்தலில் தி.மு.க-வுக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்துக் கொடுத்த பிரசாந்த் கிஷோர் மேற்குவங்க தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகிறார். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் தேர்தலில் பா.ஜ.க தான் வெற்றி பெறும் என பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
I am glad BJP is taking my chat more seriously than words of their own leaders!
— Prashant Kishor (@PrashantKishor) April 10, 2021
They should show courage & share the full chat instead of getting excited with selective use of parts of it.
I have said this before & repeating again - BJP will not to CROSS 100 in WB. Period.
அந்த ஆடியோவில், மோடி என்ற பெயருக்காகவும், இந்து என்பதற்காகவும் பா.ஜ.க-வுக்கு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்றும், மேற்கு வங்க மாநிலத்தில் 27% தலித் மக்கள் மற்றும் 1 கோடி இந்தி பேசும் மக்கள் அனைவரும் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என பிரசாந்த் கிஷோர் பேசுகிறார்.
மேற்குவங்க அரசியலில் பெரும் சர்ச்சையாகியுள்ள இந்த ஆடியோ குறித்து, தன் ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கும் பிரசாந்த் கிஷோர், ``பா.ஜ.க-வினர் அவர்களது தலைவர்கள் பேசுவதை விடவும், எனது பேச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்" எனக் கூறியுள்ளார்.
மேலும், ``நான் பேசிய முழு ஆடியோவையும் வெளியிடாமல், ஒருசில வார்த்தைகளை மட்டும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பா.ஜ.க-வினர் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். நான் முன்பு கூறியதுபோன்று, பா.ஜ.க 100 தொகுதிகளுக்கு மேல், மேற்கு வங்கத்தில் வெல்ல முடியாது" என பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/prashant-kishor-audio-leak-west-bengal-bjp
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக