Ad

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

குஜராத்: கொரோனா கேர் மருத்துவமனையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து! - 16 பேர் பரிதாப பலி #NowAtVikatan

குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து..! 

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. ஓய்வின்றி இயங்கும் மருத்துவமனைகளில் தற்போது விபத்துக்களும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில், ஆக்ஸிஜன் கசிவினால் கொரோனா நோயாளிகள் பலியானது, ஏ.சி வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு நோயாளிகள் பலர் பலியானதும் அதிர்ச்சி அளித்த நிலையில், தற்போது குஜராத் மருத்துவமனையிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து

குஜராத் மாநிலம் பாரூச் நகரில் படேல் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முன்னர் பல கொரோனா நோயாளிகள் உடல் கருகியும் கடும் புகையினால் பாதிக்கப்பட்டும் பலியானார்கள். அதிகாலை நிலவரப்படி தீ விபத்தில் 12 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 16 -ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் இருக்கும் மற்ற நோயாளிகள் வேறு பிரிவுக்கும், நகரின் மற்ற மருத்துவமனைகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். பலியான 16 நபர்களில் 14 பேர் கொரோனா நோயாளிகள் எனவும், 2 பேர் செவிலியர்கள் எனவும் தெரிய வந்திருக்கிறது.



source https://www.vikatan.com/news/general-news/01-05-2021-just-in-live-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக