Ad

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

புதுச்சேரி: `5 ரூபாய்க்கு மதிய உணவு!’ - தொடங்கி வைத்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த பெருந்தொற்றுச் சூழலில் புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. அதனடிப்படையில் ஏழை மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க அரசின் பாண்லே கடைகளில் 1 ரூபாய்க்கு முகக்கவசமும், 50 மி.லி கொண்ட கிருமிநாசினி பாட்டில் 10 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றன.

Also Read: புதுச்சேரி: `கொரோனா 2-வது அலை இளைஞர்களை அதிகமாகத் தாக்குகிறது!’ - துணைநிலை ஆளுநர் தமிழிசை

அதன் தொடர்ச்சியாக இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் பாண்லே பாலகத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி, ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஜிப்மர் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள நான்கு பாண்லே பாலகங்களில் இந்த 5 ரூபாய் மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வரவேற்பை பொறுத்து அனைத்து பாண்லே பாலகங்களிலும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-governor-inaugurated-cheap-price-meals-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக