Ad

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

காங்கிரஸ் எம்.பி தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டு... 300 கோடியை தாண்டிய ரொக்கம்! - சீண்டும் பாஜக

ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒடிசாவில் 'பவுத் டிஸ்டிலெரி' எனப்படும் மதுபான ஆலை மற்றும் அதற்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்திய சோதனையில், இதுவரை, 300 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸின் மாநிலங்களவை உறுப்பினர், தீரஜ் சாஹு வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தினர்.

மீட்கப்பட்ட பணம்

அப்போது கணக்கில் வராத ரொக்கப் பணம் கட்டுகட்டாக மீட்கப்பட்டிருக்கிறது. `இதுவரை ரூ.300 கோடி பணம் எண்ணப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கலாம். ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்கு சுமார் மூன்று டஜன் பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், நோட்டு எண்ணும் பணி மெதுவாக நடைபெற்று வருகிறது.’ எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்களும்(தீரஜ் சாஹு), உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் மக்களை சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்திரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப்பெறப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், "தீரஜ் சாஹூ தொழிலுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகளவு பணம் பறிமுதல் செய்தது குறித்து அவர் தான் விளக்கம் அளிக்க முடியும். உரியப் பதிலை அவர் அளித்தாக வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



source https://www.vikatan.com/government-and-politics/income-tax-department-the-amount-of-seized-cash-is-expected-to-reach-rs-300-crore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக