Ad

வெள்ளி, 26 மே, 2023

விழுப்புரம்: இரண்டரை வயது குழந்தையை கொன்ற சித்தி - நீதிமன்றம் அதிரடி

விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷிமிரலுதீன். 2019-ம் ஆண்டு இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்ததும் தாய் இறந்துள்ளார். எனவே, பாத்திமா தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து, அப்சனா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார் ஷிமிரலுதீன். இந்த நிலையில், சிறுமி பாத்திமாவுக்கு நீரிழிவு நோய் இருந்து வந்துள்ளது. இதனால், அடிக்கடி குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனை அனுசரித்துக் கொள்ள முடியாத அப்சனா, குழந்தையை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் பாத்திமா வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 

விழுப்புரம் நீதிமன்றம்

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, பாத்திமாவின் மாமா முகமது ஷாகிர் விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி  வழக்கு பதிவு செய்த போலீஸார், உடற்கூறாய்வு முடிவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது... சிறுமி பாத்திமாவின் சித்தி அப்சனாவே, சிறுமியின் நெஞ்சை காலால் அழுத்தி கொடூரமாக கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து அப்சனாவை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று (26th) அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி ஹெர்மிஸ். இரண்டரை வயது குழந்தையை கொலை செய்த அப்சனா-வுக்கு, தனி சட்டப்பிரிவுகளின் படி 4 ஆண்டு சிறை தண்டனை உட்பட ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டதோடு, 30,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.



source https://www.vikatan.com/crime/a-villupuram-court-sentenced-a-woman-to-life-imprisonment-for-murdering-a-two-and-a-half-year-old-child

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக