Ad

திங்கள், 19 செப்டம்பர், 2022

பொன்னியின் செல்வன் யாத்திரை: வந்தியத்தேவன் உலாவிய 14 இடங்கள் - நீங்களும் பயணிக்கலாம்!

வீராணம் ஏரி

வீராணம் ஏரி: 74 கணவாய்கள், 16 கிலோ மீட்டர் நீளம், 4 கிலோ மீட்டர் அகலம் கொண்ட கடல் போன்ற விசாலமான பெரிய ஏரியை தனது தந்தை வீரநாராயணன் பெயரில் ராஜாதித்த சோழன் அமைத்தார்.

மேலக்கடம்பூர் திருக்கோயில்

மேலக்கடம்பூர் திருக்கோயில்: இது 'கரக்கோயில்' வகையைச் சார்ந்தது. நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய குதிரைகள் பூட்டப்பெற்ற நிலையில் தேர் வடிவிலான கட்டுமானம் கொண்டது.

கீழக்கடம்பூர் திருக்கோயில்

கீழக்கடம்பூர் திருக்கோயில்: இசையொலிக்கும் சிற்பங்களைக் கொண்ட இந்த அழகிய கோயிலில் காணப்படும் மாப்பிள்ளை கோல சுந்தரேசர் வெகு அபூர்வம். இது சம்புவரையர்களின் மாளிகையாகவும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

வீரநாராயண பெருமாள் கோயில்

வீரநாராயண பெருமாள் கோயில்: நாதமுனிகளின் அவதார திருக்கோயில் இது. இத்தலத்தில் வழிபட்டால் 108 திவ்ய தேசங்களுக்கும் சென்று வழிபட்ட பேறுகிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

அனந்தீஸ்வரர் கோயில்

அனந்தீஸ்வரர் கோயில்: காட்டுமன்னார் கோயில் சவுந்தரநாயகி உடனுறை அனந்தீஸ்வரர் ஆலயத்தில்தான் ஆதித்த கரிகாலனின் மரணத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்ட கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.

கயிலாசநாதர் ஆலயம்

பழையாறை: இங்குள்ள உடையாளூர் ராஜராஜச் சோழன் தங்கியிருந்த இடம் எனப்படுகிறது. இங்குள்ள கயிலாசநாதர் ஆலயம் கல்வெட்டுச் சிறப்பு உடையது. இங்கு சிவபாதசேகரன் என்பதை விளக்கும் சிறப்பு சிற்பமும் உள்ளது.

ராஜராஜன் பள்ளிப்படை

ராஜராஜன் பள்ளிப்படை: சோழன்மாளிகை கிராமத்துக்கு அருகே உடையாளூர் எனும் கிராமத்தில் நெருக்கமான வீடுகளுக்கு நடுவே ராஜராஜ சோழனின் பள்ளிப்படைக் கோயில் எனப்படுகிறது.

சோமநாதேஸ்வரர் கோயில்

சோமநாதேஸ்வரர் கோயில்: பழையாறையில் உள்ள பிரமாண்ட கோயில் இது. இங்குதான் பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் அவதரித்தார் எனப்படுகிறது. இங்கு அவருக்கு ஒரு சிலையும் உள்ளது.

நந்திபுர விண்ணகரம்

நந்திபுர விண்ணகரம்: நாதன் கோயில் எனப்படும் இங்கு ஸ்ரீநிவாஸன் என்ற திருப்பெயரில் அமர்ந்த கோலத்தில் அருள்கிறார், இங்கே கருவறையில் பெருமாளோடு நந்திபகவான் காட்சி தருவது சிறப்பு.

பஞ்சவன் மாதேவியார்

பஞ்சவன்மாதேவீச்சரம்: தனது சிற்றன்னை மறைந்தப் பிரிவைத் தாங்காத ராஜேந்திரன், அவரது நினைவாக பள்ளிப்படைக் கோயிலான பஞ்சவன்மாதேவீச்சரத்தைக் கட்டினார்.

திருப்புறம்பியம்

திருப்புறம்பியம்: வயல்வெளிகளுக்கு நடுவே கேட்பாரற்றுக் கிடக்கிறது கங்க மன்னன் பிரிதிவீபதியின் பள்ளிப்படைக் கோயில். விஜயாலயச் சோழன் இங்கு காட்டிய வீரத்தால் இன்றும் அவர் தெய்வமாக வழிபடப்படும் அதிசயத்தை காணலாம்.

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில்: 1000 ஆண்டு கால பிரமாண்ட அதிசயம். மாமன்னன் ராஜராஜனின் ஆட்சி, நிர்வாகத் திறன், ராணுவ வலிமை, கலை, கட்டுமானம் என்று அனைத்துக்கும் சாட்சியாக நிற்பதைக் காணலாம்.

குழகர் கோயில்

குழகர் கோயில்: பூங்குழலியின் நினைவாக இன்றும் காணும் அழகிய கோயில் இது. மூலவர் குழகேஸ்வரர், தாயார் மைத்தடங்கண்ணி அம்மை. இங்கு நடைபெறும் களறியாட்டம் தமிழர்களின் தலை சிறந்த அடையாளம் எனலாம்.

கோடியக்கரை கடற்கரை

கோடியக்கரை கடற்கரை: கோடியக்கரை கடற்கரை மற்ற கடற்கரையை விட அழகாகத் தெரிவதற்கு மிக முக்கிய காரணம், அதன் அமைப்பு. 90 டிகிரி கோணத்தில் அழகாகக் காட்சி தரும் இந்தக் கடற்கரை.

வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்

4 முறை வெற்றிகரமாக பயணித்து இப்போது 5-ம் முறையாக நடைபெற இருக்கும் 'வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்' என்ற சுற்றுலா வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

வந்தியத்தேவன் வழியில் ஒரு வரலாற்றுப் பயணம்

நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).

களறியாட்டம்

முன்பதிவு விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.



source https://www.vikatan.com/ampstories/spiritual/temples/ponniyin-selvan-tour-2022-october-8th-to-10th-how-to-participate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக