Ad

புதன், 2 மார்ச், 2022

5 Minutes-ல அழகாக புடவை கட்டலாம்! | Simple Saree Draping Tips For Beginners | Step by Step Tutorial



source https://www.vikatan.com/lifestyle/fashion/how-to-drape-saree-easily-in-5-minutes

இன்றைய ராசி பலன் | 03/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam

12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs



source https://www.vikatan.com/spiritual/astrology/03032022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan

செவ்வாய், 1 மார்ச், 2022

`விபத்தும், மரணமும் வாடிக்கையாகிவிட்டது! - சிமென்ட் லாரிகளுக்கு எதிராக கொதிக்கும் அரியலூர் மக்கள்

அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் லாரிகளால் விபத்து நடப்பதும், அதில், மக்கள் இறப்பதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பொதுமக்கள்

அரியலூரிலிருந்து வேணாநல்லூர் கிராமத்திற்கு அரசு பேருந்து சென்றபோது காட்டுபிரிங்கியம் என்ற இடத்தில் எதிரே வந்த சிமென்ட் ஆலைக்குச் சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பேருந்தின் பக்கவாட்டில் மோதி இழுத்துச் சென்றது. இதில் பேருந்தின்‌ முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதி முழுமையாகச் சேதமடைந்தது. இதில், 5 மாணவிகள் உள்ளிட்ட 20 பேர் காயமடைந்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் கொளஞ்சியப்பன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், டிப்பர் லாரிகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்தும் சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் டிப்பர் லாரிகளை பொது மக்கள் பயன்படுத்தும் சாலையில் இயக்காமல் தனிப்பாதையில் இயக்க வேண்டும் என வலியுறுத்தியும் கிராம‌ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது மக்களின் போராட்டத்தால் சாலையின் ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

அரசு பேருந்து

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேசினோம். ”சிமென்ட் ஆலைகளுக்குச் செல்லும் லாரிகளால் விபத்து நடப்பதும், அதனால், மக்கள் இறப்பதும் இங்கு வாடிக்கையாகிவிட்டது. இதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டக்கோவில் என்னும் இடத்தில் அதிவேகமாக வந்த சிமெண்ட் லாரி அரசு பேருந்தின் மீது மோதியதில் சம்பவம் இடத்திலேயே ஐந்து பேர் இறந்து போனார்கள்.

சிலர் மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலும் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமலும் நான்கு பேர் என ஒன்பதுக்கும் மேற்பட்டோர் இறந்துபோனார்கள். அதேபோல் இன்னும் இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்திருக்கிறது. சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகளால் மக்கள் இறப்பது தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

சிமென்ட் ஆலை!

ஆனால் இன்று வரையிலும் பெரிதாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஒரு விபத்து நடந்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள். அதுவும் அவர்களுக்குச் சேரவேண்டியது சேர்ந்துவிட்டால் அவ்வளவுதான். இதற்கு நிரந்தர தீர்வு ஏதாவது செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. சிமெண்ட் ஆலைக்குச் செல்லும் லாரிகள் அதிக லோடு ஏற்றவேண்டும் என்கிற போட்டியால் இதுபோல் தொடர் விபத்துக்கள் நடக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இல்லையேல் பலர் உயிரிழப்பது தொடந்துக்கொண்டு தான் இருக்கும்"என்கின்றனர் காட்டமாக.



source https://www.vikatan.com/news/tamilnadu/accident-and-death-have-become-routine-ariyalur-people-against-cement-lorries

``மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது..!’’ - உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன்... நடந்ததை விவரிக்கும் நண்பர்

ரஷ்யா - உக்ரைன் போரில் கர்நாடக மாநில ஹாவேரி பகுதியைச் சேர்ந்த 21 வயதான நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். அவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், அவரின் நண்பர் ஶ்ரீகாந்த் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், "கடந்த 5 நாள்களாக உக்ரைனில் உள்ள கார்கிவ் பகுதியில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அடித்தளத்தில் நானும், நவீன் இன்னும் சில நண்பர்கள் பதுங்கியிருந்தோம்.

கார்கிவிலிருந்து வெளியேறுவது உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமம் என்பதால் இந்த முடிவை மேற்கொண்டோம். நேற்று(நேற்று முந்தினம்) மாலை 3 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது.

உக்ரைன் போர்

இந்த நிலையில், நேற்று(நேற்று முந்தினம்) இரவே எங்களிடம் இருந்த உணவுப் பொருள்கள் தீர்ந்துவிட்டன. நான் காலை தூங்கி எழுந்த போது நவீன் இல்லை. அவனின் செல்போனில் தொடர்பு கொண்ட போது குடியிருப்புக்கு அருகில் 50 மீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்குச் சென்றிருப்பதாகவும், கடையில் பொருள்கள் வாங்க பணம் அனுப்பிவிடக் கேட்டிருந்தான்.

நானும் சரி எனப் பணம் அனுப்பி விட்டு அவனுக்குத் தொடர்பு கொள்ள முயன்ற போது அவன் என் அழைப்பை எடுக்கவில்லை. அப்போது மிகப் பயங்கரமான குண்டு வெடிக்கும் சப்தமும், துப்பாக்கி சப்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. நான் பதற்றத்துடன் அவன் வருகையை எதிர்பார்த்திருந்தேன். அவன் வரவே இல்லை என்பதால் 30 நிமிடங்களுக்கு பின் மீண்டும் அவனை செல்போனில் தொடர்பு கொண்டபோது யாரோ ஒரு உக்ரேனியர் பேசினார்.

உக்ரைன்

அவர் பேசுவது எனக்குப் புரியவில்லை அதனால் எனக்கு அருகில் இருக்கும் மற்றொரு உக்ரேனிய பெண்ணிடம் செல்போனை கொடுத்துப் பேசச் சொன்னேன். அவர் பேசும் போதே அழத் தொடங்கினார். நான் கேட்டபோது நவீன் இறந்துவிட்டான் எனக் கூறினார். நானும் நண்பர்களும் அந்த இடத்துக்குச் சென்று பார்த்த போது அங்குக் குண்டு வெடித்ததுக்கான அடையாளம் எதுவும் இல்லை.

அவனைத் துப்பாக்கியால் தான் சுட்டுக் கொன்றிருக்க வேண்டும். அவனது உடல் எங்கே என்றுக் கூட எங்களுக்குத் தெரியாது. இங்குக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 120 மாணவர்கள் இருக்கிறோம், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 2000 பேர் வரை இருக்கிறோம். இங்கிருந்து அண்டை நாட்டுக்குச் செல்ல உக்ரைனியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன்

அதிக குண்டுவெடிப்பு காரணமாக நாங்கள் வெளியே செல்ல பயப்படுகிறோம். வெளியே செல்லும் ஒவ்வொருவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தான் செல்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/went-to-store-unsure-how-he-died-friend-of-indian-killed-in-ukraine

அதிமுக: ``சசிகலா தலைமை வேண்டும்" - நிர்வாகிகளின் எதிர்பார்ப்புக்கு தலைமையின் பதில் என்ன?

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி வெளியான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் தலைமை குறித்த சிறு சலசலப்பை உண்டாக்கியிருந்தது. இந்தநிலையில், `கட்சியில் ஒற்றைத் தலைமை தேவை என தலைமை முடிவு செய்தால் அதையும் அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அது காலத்தின் கையில்' என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது கருத்துத் தெரிவித்திருப்பது இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்வரை அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் கௌரவமான வெற்றியைப் பெற்ற போதிலும், உள்ளாட்சித் தேர்தல்களில் மிகப்பெரிய தோல்விகளைச் சந்தித்து வருவது கட்சிக்குள் மிகப்பெரிய பூகம்பத்தை உண்டாக்கியுள்ளது. `கட்சியில் தலைவர்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் மட்டும் அனைத்து விஷயத்திலும் கவனம் செலுத்தி ஐம்பதுக்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டார்கள். ஆனால், கீழ்மட்ட, நிர்வாகிகள், தொண்டர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்களை கட்சித் தலைமை கண்டுகொள்ளவே இல்லை. அதனால்தான் கட்சி அதளபாதளத்துக்குச் சென்றுவிட்டது' என முணுமுணுக்கிறார்கள் முன்னணி நிர்வாகிகள் சிலர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னணி நிர்வாகிகள் சிலர் ,

``தேர்தல் வெற்றி, தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு சகஜமான ஒரு விஷயம்தான். அதிமுகவும் படுமோசமான தோல்விகளைச் கடந்த காலத்தில் சந்தித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் அம்மா. வேட்பாளர் தேர்வு தொடங்கி, தேர்தலுக்கான செலவுவரை ஏற்பாடுகள் மிகச் சரியாக இருக்கும். அனைத்தையும் செய்து, மோதிப்பார்த்து தோற்பது என்பது வேறு. ஆனால், திமுக பெரும் பலத்தோடு களத்தில் நிற்கும்போது, நாங்கள் பலவீனமாக நின்றுகொண்டு, அவர்களை எதிர்த்து தோற்றுப் போவதைத்தான் எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. திமுகவினரே மிகவும் பரிதாபமாக பார்க்கும் நிலையில்தான் நாங்கள் இப்போது இருக்கிறோம்.

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏக்களுக்கு கட்சி சார்பில் பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட கீழ்மட்டத் தொண்டர்களை கட்சி கைவிட்டுவிட்டது. பண உதவி செய்யாமல் போனது ஒருபுறம் என்றால், மாவட்ட, ஒன்றியச் செயலாளர்களின் முறையான சப்போர்ட் கிடைக்காமல் போனதுதான் வேதனையிலும் வேதனையாக இருக்கிறது. அதிலும் சென்னையில் எல்லாம் சொல்லவே வேண்டாம். சட்டமன்றத் தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் சரி சென்னையை ஒரு பொருட்டாகவே இரண்டு தலைமைகளும் கருதவில்லை. இங்குள்ள மாவட்டச் செயலாளர்களும் கண்டுகொள்ளவில்லை.

இரட்டைத் தலைமைகள் இரண்டு பேருமே தங்களின் பணத்தை கடைசிவரை வெளியில் எடுக்கவே இல்லை. அவர் செய்யட்டும் என இவரும் இவர் செய்யட்டும் என அவரும் ஒதுங்கிக் கொண்டார்கள். அதுமட்டுமில்லை, ஓ.பி.எஸ்ஸிடம் ஒரு விஷயத்துக்குப் போனால், இ.பி.எஸ்ஸுக்குப் பிடிக்காது. இவரிடம் போனால் அவருக்குப் பிடிக்காது. அதனால், நிர்வாகிகள் யாரும் எந்தப் பிரச்னைகளையும் தீர்க்கமுடியாமல், அப்படியே காலத்தைக் கழித்து வருகின்றனர். கடந்த காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கட்சி நிர்வாகிகள் யாராவது அவரிடம் உதவிக்குப் போனால், `உனக்கு செஞ்சா, அவர் ஏதாவது நினைச்சுக்குவார்' என அதே மாவட்டத்தில், பகுதியில் உள்ள வேறு யாரையாவது கைகாட்டி எதுவுமே செய்யாமல் தட்டிக் கழித்துவிடுவார்.

சசிகலா - தினகரன்

ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்று சொல்லியிருக்கிறார் கடம்பூர் ராஜூ. உண்மையைச் சொன்னால் அதற்கான காலம் தற்போதுதான். இவர்கள் இருவரில் மட்டுமல்ல, கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவராக இருக்கும் யாரையும் தங்களின் ஒற்றைத் தலைமையாக ஏற்றுக்கொள்ள தொண்டர்கள் யாரும் தயாராக இல்லை. இவர்களில் யார் ஒருவர் வந்தாலும் துணிச்சலாக சவால்களை எதிர்கொள்வார்களா, தாராளமாகச் செலவு செய்வார்களா என்பது சந்தேகம். அதனால், கட்சியின் ஒற்றைத்தலைமையாக சசிகலா வரவேண்டும் என்பதுதான் கட்சியிலுள்ள பெரும்பான்மையான நிர்வாகிகளின், தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அம்மா இருந்த காலத்திலேயே, வேட்பாளர் தேர்வில் தொடங்கி, முறையான வியூகங்களை வகுத்து, துணிச்சலாக செலவு செய்து கட்சியை தேர்தலில் வெற்றி பெற வைத்ததில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. இந்த நேரத்தில், அவரைப் போன்ற ஒருவர்தான் கட்சித் தலைமைப் பொறுப்புக்கு சரியாக இருப்பார்.

அதுமட்டுமல்ல, வழக்குகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு எப்போதும் பயந்துகொண்டே இருப்பவர்களை தலைமையாக ஏற்பதா இல்லை சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டாலும் துணிச்சலாக அதை எதிர்கொள்பவர்களை ஏற்பதா என்றால் நிச்சயமாக அனைவரின் விருப்பமும் இரண்டாவதாகத்தான் இருக்கும். அந்தவகையில் சசிகலாதான் தலைமைக்கு ஏற்றவராக இருக்கிறார். ஒருசிலர் தினகரனைக்கூட தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவராக நினைக்கிறார்கள். ஆனால், சசிகலாதான் அனைத்து விதத்திலும் பொருத்தமானவராக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியவராகவும் இருக்கிறார். விரைவில் அவர் தலைமைப் பொறுப்பை ஏற்கவேண்டும். எங்கள் கட்சிக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்'' என்கிறார்கள்.

கோவை செல்வராஜ்

நிர்வாகிகளின் இந்த எதிர்பார்ப்பு குறித்து, அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்,

`` ஓ.பி.எஸ்&இ.பி.எஸ் முறையாகத் தலைமைப் பொறுப்பு தேர்வு செய்யப்பட்டவர்கள். கட்சிக்குள் ஒற்றைத் தலைமைக்கான குரல் எதுவும் எழவில்லை. வெளியில் இருந்து ஒருவர் வந்து எங்களைக் காப்பாற்றும் நிலையில் எங்கள் கட்சியும் இல்லை'' என்பதோடு முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-admk-internal-politics-and-sasikala-re-entry

`Bodybuilding Competition-ல அழகா இல்லைனு Reject பண்ணிட்டாங்க!' - South Indian Champion Sangeetha



source https://www.vikatan.com/social-affairs/women/bodybuilding-champion-sangeetha-shares-her-struggles

இன்றைய ராசி பலன் | 02/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs



source https://www.vikatan.com/spiritual/astrology/02032022-daily-rasi-palan-daily-horoscope-astrology-sakthi-vikatan