source https://www.vikatan.com/spiritual/astrology/weekly-astrology-predictions-for-the-period-of-march-1st-to-6th
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today's Horoscope | rasi palan #DailyHoroscope | #Rasipalan | #Horoscope #Raasi #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam
12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் விஜய்ரூபன். களக்காடு பகுதியில் 'லவ் பேர்ட்ஸ்' பறவைகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியிலும் ஆர்வமாகச் செயல்பட்டுவரும் அவர், சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி 2-வது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
விஜய்ரூபன் தனது உறவுக்காரப் பெண் ஒருவரை கடந்த நான்கு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். அவர்களது காதல் வெளியே தெரிந்ததும் குடும்பத்தில் எதிர்ப்பு ஏற்பட்டதால் பெண்ணின் தந்தையை நேரில் சந்தித்த விஜய்ரூபன், அவரின் மகளை திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் விஜய்ரூபனுக்கு நிரந்தர வருமானத்துக்குரிய தொழில் இல்லாததால் அவருக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டார்.
விஜயரூபன் தொடர்ந்து தன் மகளின் பின்னால் சுற்றுவதை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவுசெய்து, திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். காதல் மற்றும் தேர்தல் தோல்வி ஆகியவற்றில் தொடர்ச்சியாக ஏற்பட்ட தோல்வியால் விஜய்ரூபன் ஆத்திரம் அடைந்துள்ளார்.
காதலித்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் நடக்க இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அவர், தாங்கள் காதலித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் அந்தப் பெண் கொடுத்த கவிதை நடையிலான கடிதத்தின் நகல் ஆகியவற்றை போஸ்டராக அச்சடித்து களக்காடு நகரம் முழுவதும் ஒட்டியுள்ளார்.
காதலித்த பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையின் வீட்டைச் சுற்றிலும் அதிகமான எண்ணிக்கையில் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார். அதைப் பார்த்த மணமகன் வீட்டினர் அதிர்ச்சியடைந்து பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தப் பெண்ணின் தந்தை களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் களக்காடு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விஜய்ரூபனை தேடியுள்ளார். அதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தால் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
என் வயது 27. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வயிற்றுவலி, நெஞ்சுவலி இருந்தது. ஸ்கேன் செய்து பார்த்தபோது உணவுக்குழலிலும் பித்தப்பையிலும் புண் இருப்பதாகச் சொல்லி மாத்திரை சாப்பிடச் சொன்னார் மருத்துவர். அந்த மாத்திரை சாப்பிட்டால் எனக்கு தூக்கம் வருகிறது. தற்போது எனக்கு உடல் எடை அதிகரித்துவிட்டது. என்னால் என் வேலைகளைக்கூட செய்ய முடியவில்லை. எப்போதும் உடல்வலி, கால்வலி இருந்துகொண்டே இருக்கிறது. களைப்பு, சோர்வும் இருக்கிறது. உடல் எடை குறைய என்ன செய்வது?
- கஜா (விகடன் இணையத்திலிருந்து)
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, லேப்ராஸ்கோப்பிக் மற்றும் பாரியாட்ரிக் அறுவைசிகிச்சை நிபுணர் ஜெயந்த் லியோ.
``நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் பற்றிய தகவல்கள் இல்லை. அது தெரிந்தால்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அதிக தூக்கம், அதிகரித்த உடல் எடை, களைப்பு, சோர்வு, உடல்வலி, கால்வலி என அனைத்துக்கும் அந்த மருந்துகளுடன் ஏதேனும் தொடர்புண்டா என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். தவிர, உடல் எடையைக் குறைப்பது என்பது பொதுவான ஆலோசனைகளால் அனைவருக்கும் சாத்தியமாவதில்லை.
உங்களுடைய பி.எம்.ஐ (உயரத்துக்கேற்ற எடை இருக்கிறீர்களா என்ற பாடி மாஸ் இண்டெக்ஸ் கணக்கு), உங்கள் வாழ்க்கைமுறை, உடலியக்கம், உணவுப் பழக்கம் என அனைத்தையும் ஆராய்ந்துதான் உங்களுக்கேற்ற சரியான, பிரத்யேக எடைக்குறைப்புத் திட்டத்தைப் பரிந்துரைக்க முடியும்.
எனவே, நீங்கள் தற்போது எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரங்கள், உங்கள் ஹெல்த் ரிப்போர்ட் என எல்லாவற்றுடனும் உடல் பருமன் சிகிச்சைக்கான மருத்துவரை அணுகி, அவரது பரிசோதனைக்குப் பிறகு அவர் பரிந்துரைக்கும் விஷயங்களைப் பின்பற்றுவதுதான் சரியாக இருக்கும்."
உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியும் அவரின் மனைவியும் அடிக்கடி எதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. தற்போது குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக வினோத் காம்ப்ளி கைது செய்யப்பட்டுள்ளார். வினோத் காம்ப்ளி நேற்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்து குடிபோதையில் காரை வெளியில் எடுத்தார். அந்நேரம் கார் எதிர்பாராத விதமாக அங்கு நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான ரமேஷ் பவாரின் மனைவி கார் மீது மோதிக்கொண்டது. அதோடு கட்டடத்தின் கேட் மீதும் இடித்துக்கொண்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து கட்டடத்தின் வாட்ச்மென் மற்றும் அதில் குடியிருக்கும் கிரிக்கெட் வீரர் ரமேஷ் பவாரின் மனைவி தேஜஸ்வி உட்பட சிலருடன் வினோத் காம்ப்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதோடு வேகமாக காரை எடுத்துக்கொண்டு வெளியில் புறப்பட்டு சென்றார். தேஜஸ்வி இது குறித்து வினோத் காம்ப்ளி மீது போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனே விரைந்து வந்த வினோத் காம்ப்ளியின் காரை மடக்கி அவரை கைது செய்தனர்.
அவர் மீது குடிபோதையில் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் காம்ப்ளி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 100 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கும் வினோத் காம்ப்ளியிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மோசடிப் பேர்வழிகள், வங்கி அதிகாரிகள் என்று கூறி ரூ.1.14 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வினோத் காம்ப்ளியும், அவரின் மனைவி ஆண்ட்ரியா ஹவிட்டும் சேர்ந்து மால் ஒன்றில் பாடகர் அங்கிட் திவாரியின் தந்தை ராஜ்குமார் திவாரியை அடித்து உதைத்தனர். காம்ப்ளியின் மனைவி தனது செருப்பை எடுத்து காட்டி மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 2009-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த காம்ப்ளி, மனைவி ஆகிய இருவரும் வீட்டு வேலைக்கார பெண்ணை அடித்து உதைத்ததாகவும் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பராக தன்னை காட்டிக்கொள்ளும் வினோத் காம்ப்ளி மொத்தம் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களைக் கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறன.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தலைநகர் கீவில் இருந்தபடி களநிலவரத்தை வீடியோ மூலமாக விவரித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், உக்ரேனிய மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அந்நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இதுவரை பல லட்சம் மக்கள் வெளியேறியுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.
மேலும், உக்ரைனில் சிக்கியிருக்கும் 20,000 இந்தியர்களை மீட்க இந்திய வெளியுறவுத்துறை முயன்று வருகிறது. இந்த நிலையில், மருத்துவம் பயில உக்ரைன் நாடு சென்ற ஹரியானாவைச் சேர்ந்த மாணவி இந்தியா திரும்ப மறுத்துள்ளார்.
இது குறித்து வெளியான தகவலில், மருத்துவம் பயிலச் சென்ற மாணவிக்கு, கல்லூரியில் தங்கும் விடுதி கிடைக்கவில்லை. அதனால் வெளியே தனியாக வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். தற்போது போர் சூழல் காரணமாக அந்த வீட்டின் உரிமையாளர் யுத்தகளத்துக்குச் சென்றுவிட்டார்.
அதனால், அவரின் மனைவியும், மூன்று குழந்தைகளும் பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் அந்த குழந்தைகளை விட்டு வர மனமில்லை. எனவே யுத்தம் முடிந்த பின் இந்தியா வருவதாகத் தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் தாய் எவ்வளவு முயன்றும் அவர் வர மறுப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை அந்த மாணவியின் குடும்ப நண்பர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
ஒருபோதும் ஒருதலைப்பட்சம் கூடாது
1950-ல் இந்தியா ஒரு குடியரசாக அறிவிக்கப்பட்ட அன்று ராஷ்டிரபதி பவனில் அவர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி இது. "இந்தியா ஒரு போதும் தனது எந்தக் கருத்தையும் நம்பிக்கையையும் பிறருக்குப் பரிந்துரைப்பதும் இல்லை. கட்டாயப்படுத்துவதும் இல்லை. தெய்வ நம்பிக்கை உள்ளவர், தெய்வ நம்பிக்கை இல்லாதவர், இறைவனைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லாதவர் ஆகிய அனைவருக்கும் இந்த நாட்டில் இடம் உண்டு என்பதுதான் இந்தியாவின் அணுகுமுறை".
உயரப் பறக்கும் அதே நேரம் மண்ணில் கால் பதிக்க வேண்டும்
என்னதான் வாழ்க்கையில் பல உயரங்களை அடைந்தாலும் நம் மண்ணின் பெருமையை மறக்கக்கூடாது. மக்களை விலக்கி வைக்கக்கூடாது. ராஷ்டிரபதி பவனில் ராஜேந்திர பிரசாத்துக்கு முன்பே பிரிட்டிஷ் அதிகாரிகள் வசித்துள்ளனர். ஆனால் ராஜேந்திர பிரசாத் குடியரசுத் தலைவர் ஆனவுடன், "ஆண்டுக்கு ஒருமுறை ராஷ்டிரபதி பவன் வளாகத்திலுள்ள பிரமாண்டமான முகலாயத் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படும்" என்றார்.
எளிமையே பெருமை
சிறப்புகளை அடைய அடைய தலைக்கனம் அதிகமாக வாய்ப்பு உண்டு. அப்படி நேராமல் பார்த்துக் கொண்டால்தான் அந்த சிறப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். டாக்டர் ராதாகிருஷ்ணனின் கல்விச் சிறப்புகள் நாடறிந்தவை. எனினும் அவருக்கு முன்பாகக் குடியரசுத் தலைவராக விளங்கிய ராஜேந்திர பிரசாத்தும் கல்வியில் சிறப்புப் பெற்றவர்தான். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியவர் (அப்போதெல்லாம் பல்கலைக்கழகத்தில் ஓரிருவருக்குதான் முதல் வகுப்புத் தேர்ச்சி வழங்கப்படும்). ஒரு தேர்வில் ராஜேந்திர பிரசாதின் விடைத்தாளில், "தேர்வாளரை விட இந்த மாணவன் மேம்பட்ட அறிவுள்ளவனாக இருக்கிறான்" என்று எழுதியிருந்தார் ஒரு தேர்வாளர்.
பிறருக்கு உபதேசம் செய்வதை நாமும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ராஜேந்திர பிரசாத். காந்தியின் சீடர். ஒரு முறை ‘மேற்கத்தியக் கல்வி நிறுவனங்களை நம் வாழ்வில் இருந்து ஒதுக்க வேண்டும்’ என்று காந்தி உரை நிகழ்த்த, அதைக்கேட்ட ராஜேந்திரபிரசாத் தன் மகனை அவன் படித்துக் கொண்டிருந்த மேற்கத்தியக் கல்விக் கூடத்திலிருந்து வெளியேறச் செய்து அவனை வித்யா பீடத்தில் சேர்த்தார். இது மரபு சார்ந்த இந்திய வழிக் கல்விக்கூடம்.
சுய பரிசோதனை ஞானத்தை ஊட்டும்
கால ஓட்டத்தில் வேகமான உலகில் நாம் அடுத்து அடுத்து என்று காரியங்களில் ஈடுபடுகிறோம். நடு நடுவே கொஞ்சம் நின்று நம்மை உணர்ந்து நிலைநிறுத்திக் கொண்டால் அது தெளிவான பாதையைக் காட்டும். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற காலகட்டத்தில் ராஜேந்திர பிரசாதின் உடல்நலம் கெட்டது. அவர் நினைத்திருந்தால் டெல்லியிலேயே தங்கியிருந்து உடல் நலத்துக்கான பலவித நவீன சிகிச்சைகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் பீகாரில் உள்ள தன்னுடைய எளிய வீட்டுக்குச் சென்றுவிட்டார். "நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ அங்கேயே திரும்புவதுதான் நல்லது" என்று இதைப் பற்றி குறிப்பிட்டார்.