Ad

வெள்ளி, 20 மே, 2022

சென்னை: பைனான்ஸியரை சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த கும்பல் - கொலையாளிகள் சரண்

கடந்த 18-ம் தேதி சென்னை அமைந்தகரையில் பைக்கில் சென்ற ஒருவரை மர்மக் கும்பல் ஒன்று சாலையில் வைத்து வெட்டிப் படுகொலை செய்தது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து அமைந்தகரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் செனாய் நகர்ப் பகுதியைச் சேர்ந்த பைனான்ஸியர் ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

சரணடைந்த குற்றவாளிகள்

காவல்துறையினர் அந்த பகுதியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்த நிலையில், கொலை தொடர்பாக சந்திரசேகர், ரோகித் ஆகிய இருவர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த இருவரையும் வரும் திங்கள் அன்று போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தவுள்ளனர். அந்த விசாரணையில் தான் கொலைக்கான முழு காரணமும் தெரியவரும். தற்போது, பழிதீர்க்க இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழந்த ஆறுமுகத்தின் மீது, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட ஐந்து வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/crime/article-about-brutal-murder-of-a-man-in-chennai-by-a-gang-surrendered-in-court

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக