Ad

வெள்ளி, 27 மே, 2022

``உங்கள் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம் கொடுத்தால் சரி; மக்களுக்கு கொடுத்தால்..."-கெஜ்ரிவால் காட்டம்

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து, குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல், ``சில அரசியல் தலைவர்கள் இலவசங்களால் மக்களிடம் செல்வாக்கு பெற வேண்டாம். இலவசங்கள் அரசை சீரழித்துவிடும், மேலும் அவை பொருளாதாரத்துக்கு நல்லதல்ல" என நேற்று மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்தார்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால், ``பாட்டீல் சாஹிப், உங்கள் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது, அது மட்டும் சரியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக

அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறிக்கையில், ``பாட்டீல் சாஹிப், உங்கள் அமைச்சர்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது, அது மட்டும் சரியா?. ஆனால், பொதுமக்களுக்கு நான் இலவச மின்சாரம் வழங்கினால் சிரமம் என்கிறீர்கள். குஜராத் அரசில் மிகப்பெரிய அளவில் ஊழல் உள்ளது. டெல்லியைப் போல் , பஞ்சாப்பை போல் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால், பொதுமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினாலும் இங்கு அதிகளவில் பணம் சேமிக்கப்படும்" என்று கூறினார்.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற நடைபெற்ற பேரணியில் பேசிய கெஜ்ரிவால், ``பாஜக தலைவர்கள் ஊழல் செய்வதால், பாஜக அரசாங்கம் இலவச மின்சாரம் வழங்க முடியாது. இலவச மின்சாரம் வேண்டுமானால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களியுங்கள். 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்குகிறோம்" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/arvind-kejriwal-slams-gujarat-bjp-chief-on-free-electricity

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக