Ad

ஞாயிறு, 20 மார்ச், 2022

நண்பருடன் இணைந்து பாலியல் வன்கொடுமை; நம்பி சென்ற சிறுமி தற்கொலை முயற்சி - காரைக்காலில் அதிர்ச்சி

காரைக்கால் அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இரு வாலிபர்களை  போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மனமுடைந்த   சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமை நந்தா ராமு

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே தேனுார் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின்  தந்தை,  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தாயாருடன் வசித்து வருகிறார்.  குடும்ப சூழ்நிலை காரணமாக 13 வயது சிறுமி  காரைக்காலிலுள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்துள்ளார். சிறுமி பேருந்தில் காரைக்கால்  வந்து செல்லும்போது நெய்வாச்சேரியைச்  சேர்ந்த நந்தா (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இச்சிறுமி கடையில் வேலையை முடித்துவிட்டு பேருந்தில் சென்றுள்ளார். இதை பார்த்த நந்தாவின் நண்பன் ராமு (வயது 21) நந்தாவுக்கு  தகவல் தெரிவித்துள்ளார். அப்போது சிறுமியைச்  சந்தித்த நந்தா, சுரக்குடி பேருந்து நிலையத்தில் இறங்கச்சொல்லியுள்ளார்.

இதையடுத்து சுரக்குடியில் இறங்கிய சிறுமியை நந்தா அவரின் நண்பன் ராமு ஆகிய 2 பேரும் சேர்ந்து பைக்கில் அழைத்துச்சென்று, நெய்வாச்சேரியில் ஒரு இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை பைக்கில் கொண்டு வந்து தேனுார் பகுதியில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டிற்கு காலதாமதமாக சென்ற  சிறுமியிடம், `ஏன் இவ்வளவு நேரம் தாமதமாக வர்றே?’ எனக் கேட்டு தாய் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானது மட்டுமின்றி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால், ஊருக்கு தெரிந்துவிடும் எனக்கருதி, வயலுக்கு வாங்கி வைத்திருந்த மருந்தை சிறுமி குடித்து தற்கொலைக்கு  முயன்றுள்ளார். சிறுமி விஷம் குடித்தது அறிந்த அவரின் தாயார்  சிறுமியை காப்பாற்றி காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்துள்ளார். சிறுமிக்கு தீவிரச்  சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாலியல் வன்கொடுமை

அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் "சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளனர். பின்னர் அந்தச் சிறுமி நடத்த சம்பவத்தை தாய் மற்றும் குடும்பத்தினருடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாய்  திருநள்ளாறு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி வழக்குப்பதிவு செய்து, நெய்வாச்சேரியைச்  சேர்ந்த நந்தா, ராமு  ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/13-year-old-girl-raped-by-two-friends-arrested-in-pocso

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக